Monday, October 24, 2016

திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வடக்கு வட்டத்திற்குட்பட்ட நிரந்தர பட்டாசு கடைகளை திருப்பூர் ஆர்.டி.ஓ.முருகேசன் தலைமையில் வடக்கு தாசில்தார் முருகதாஸ், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், நிலவருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரிகள் கந்தசாமி, அண்ணாதுரை ஆகியோர் கொண்ட குழு நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளில் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் கடை பிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உரிய ஆவணங்களுடன் கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். விதிகளை மீறினாலோ, உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment