Monday, October 24, 2016

உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.நகராட்சி வாரசந்தை
உடுமலை ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் வியாபாரிகள், காய்கறிகளை வாங்கி செல்வதற்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தேவையான அடிப்படை தேவைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில் வாரச்சந்தை புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கடைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது.மழை காலமாதலால் ஓடையை தூர்வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. உடுமலை தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, இணைப்பு சாலையை அமைக்கவும், உடுமலையில் அம்மா திருமண மண்டபம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நேற்று பார்வையிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆலோசனை
இந்த பணிகள் உள்பட நகராட்சிப்பகுதியின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று உடுமலையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் (சென்னை) உடுமலை நகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது நகராட்சி பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர் டாக்டர் அருண், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment