Monday, October 24, 2016
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.நகராட்சி வாரசந்தை
உடுமலை ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் வியாபாரிகள், காய்கறிகளை வாங்கி செல்வதற்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தேவையான அடிப்படை தேவைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில் வாரச்சந்தை புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கடைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது.மழை காலமாதலால் ஓடையை தூர்வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. உடுமலை தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, இணைப்பு சாலையை அமைக்கவும், உடுமலையில் அம்மா திருமண மண்டபம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நேற்று பார்வையிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆலோசனை
இந்த பணிகள் உள்பட நகராட்சிப்பகுதியின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று உடுமலையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் (சென்னை) உடுமலை நகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது நகராட்சி பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர் டாக்டர் அருண், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment