Monday, October 24, 2016
தளி,
அமராவதி ஆற்றுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த 2 முதலைகள் சிக்கின. அவற்றை வனத்துறையினர் மீட்டு முதலைப்பண்ணையில் கொண்டு ஒப்படைத்தனர்ஆற்றில் முதலைகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து சற்று தொலைவில் உடுமலை-கல்லாபுரம் சாலையில் வனத்துறையால் பராமரிக்கப்படும் முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள முதலைகளுக்கு மாட்டு இறைச்சியும், மீனும் உணவாக வழங்கப்படுகிறது. இங்குள்ள தொட்டிகளின் மேல் பகுதி மூடப்படாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பறவைகள் முதலைகுட்டிகளை உணவிற்காக எடுத்து செல்லும் நிலை உள்ளது.
அப்போது பறவைகளிடம் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைக்கும் முதலைகுட்டிகள் அமராவதி அணை மற்றும் ஆற்றுப்பகுதியில் வசிக்கின்றன. அப்படி விழும் முதலைகள் புதர்களில் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கணியூர், கடத்தூர், கல்லாபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அமராவதி ஆற்றில் உள்ள முதலைகளை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.ஊருக்குள் புகுந்தன
இந்த நிலையில் கல்லாபுரம் அண்ணாநகர் அருகே வயல்வெளி பகுதியில் ஒரு முதலை சுற்றித்திரிவதாகவும், மற்றொரு முதலை கல்லாபுரம்- கொழுமம் சாலை அருகே உள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றில் உள்ளதாகவும் வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த 2 முதலைகளையும் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 2 முதலைகளையும் முதலைப்பண்ணையில் கொண்டு வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவை அங்கு பரா மரிக்கப்பட்டு வருகின்றன
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment