Monday, October 24, 2016

தளி,
அமராவதி ஆற்றுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த 2 முதலைகள் சிக்கின. அவற்றை வனத்துறையினர் மீட்டு முதலைப்பண்ணையில் கொண்டு ஒப்படைத்தனர்ஆற்றில் முதலைகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து சற்று தொலைவில் உடுமலை-கல்லாபுரம் சாலையில் வனத்துறையால் பராமரிக்கப்படும் முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள முதலைகளுக்கு மாட்டு இறைச்சியும், மீனும் உணவாக வழங்கப்படுகிறது. இங்குள்ள தொட்டிகளின் மேல் பகுதி மூடப்படாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பறவைகள் முதலைகுட்டிகளை உணவிற்காக எடுத்து செல்லும் நிலை உள்ளது.
அப்போது பறவைகளிடம் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைக்கும் முதலைகுட்டிகள் அமராவதி அணை மற்றும் ஆற்றுப்பகுதியில் வசிக்கின்றன. அப்படி விழும் முதலைகள் புதர்களில் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கணியூர், கடத்தூர், கல்லாபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அமராவதி ஆற்றில் உள்ள முதலைகளை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.ஊருக்குள் புகுந்தன
இந்த நிலையில் கல்லாபுரம் அண்ணாநகர் அருகே வயல்வெளி பகுதியில் ஒரு முதலை சுற்றித்திரிவதாகவும், மற்றொரு முதலை கல்லாபுரம்- கொழுமம் சாலை அருகே உள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றில் உள்ளதாகவும் வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த 2 முதலைகளையும் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 2 முதலைகளையும் முதலைப்பண்ணையில் கொண்டு வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவை அங்கு பரா மரிக்கப்பட்டு வருகின்றன
Total Pageviews
News
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment