Thursday, December 15, 2016

On Thursday, December 15, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலை நகரில் போக்குவரத்து நிறைந்த பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து சத்திரம் வீதிக்கு செல்லும் இடத்தில் பொள்ளாச்சி சாலை சந்திப்பு பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி, சாலையில் ஓடும் அவல நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். சாக்கடை கால்வாய் அடைப்பை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 comments: