Thursday, December 15, 2016

திருப்பூர்,இந்தியாவில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சி ஆதரவோடு இருக்கிறார்கள் என்று திருப்பூரில் தா.பாண்டியன் கூறினார்.கருத்தரங்கம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் யுகப்புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் திருப்பூர் மங்கலம் ரோடு கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுவுடைமை குறித்து பேசினார்கள்.கருத்தரங்கம் முடிந்ததும் தா.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–பயிர்கள் கருகி விட்டது
தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் கிராமம், நகரங்களில் குடிநீருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. எனவே கையில் இருந்ததையும் இழந்ததன் காரணமாக கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். எனவே விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டிய பொறுப்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டாலும், பயிர்கள் கருகி போனாலும் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்புகிறோம் என்பார்கள். அவர்கள் பார்வையிட்டு சென்று விடுவாடுவார்கள். அதன்பிறகு அவர்கள் அறிக்கை கொடுப்பார்கள். அதில் எவ்வளவு நிவாரணம் வந்தது என்பதெல்லாம் தெரியாது. இது வாடிக்கையாகி விட்டது. எனவே மத்திய அரசு இந்த குழுக்களை நியமிப்பது என வாடிக்கையான மழுப்பல் வேலைகளை செய்யாமல், வறட்சியை எதிர்கொள்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் முழு மூச்சாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாய கடன்கள்
முதல் நடவடிக்கையாக விவசாயிகளிடம் ஒரு வருடத்துக்கு விவசாய கடன்களை வசூலிக்க கூடாது. இதற்கான அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் இயக்கங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி உடனடியாக தொடங்கும்.கருப்பு பணம்
கருப்பு பணம் வேட்டையாடுவதில் பிரதமர் மோடி இறங்கி உள்ளார். இந்தியாவில் மக்கள் படும் துயரத்தை பார்த்தால் அவர் அறிவித்த அறிவிப்பின் லட்சியத்தை அவர் அடையப்போவதில்லை. புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். களில் கிடைப்பதில்லை. ஆனால், தனியாரிடம் ரூ.100 கோடி, ரூ.200 கோடி பிடிபட்டு இருக்கிறது என்றால் அரசாங்கத்தால் அச்சிடப்படும் பணம், ரிசர்வ் வங்கியால் வினியோகிக்கப்படும் பணம் எப்படி தனியாருக்கு கிடைத்தது என்பதை மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சி அரவணைப்போடு, ஆதரவோடு இருக்கிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. கருப்பு பணம் வைத்து இருப்பவர்களை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் மக்களை இப்படி வாட்டி வதைக்கக்கூடாது.ஒத்துழைக்க வேண்டும்
மத்திய அரசு என்பது ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார புகுத்துதலை மாநில அரசுகளிடம் செய்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment