Thursday, December 15, 2016
குண்டடம் குண்டடம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன.சூறாவளி காற்று
சென்னையில் நேற்று முன்தினம் கரையை கடந்த வார்தா புயல் சென்னையை புரட்டிப்போட்டது. அதே நேரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. அதேபோல் குண்டடம் பகுதியிலும் பனித்துளிகளைப் போன்ற சாரல் பெய்தது. அப்போது பயங்கர சூறாவளிக்காற்று வீசியது.இந்தக் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேட்டுக்கடை, முத்துக்கவுண்டம்பாளையம், சந்திராபுரம், நந்தவனம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது கதிர் தள்ளிய நிலையில் இருந்த மக்காச் சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது மட்டுமின்றி இந்த போகமே வீணாகிப் போனதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.இது குறித்து தும்பலப்பட்டியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:–இழப்பீடு வழங்க வேண்டும்
இந்த போகத்தில் 2 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்தேன். மழை பொய்த்துப் போய் ஓரளவுதான் விளைந்திருந்தது. இந்த நிலையில் சூறாவளிக்காற்றால் மொத்த மக்காச்சோள பயிரும் சாய்ந்து விட்டன. இதனால் சுமார் ரூ.1.20 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டடம் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோளம் சாய்ந்து விட்டன.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment