Thursday, December 15, 2016
குண்டடம் குண்டடம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன.சூறாவளி காற்று
சென்னையில் நேற்று முன்தினம் கரையை கடந்த வார்தா புயல் சென்னையை புரட்டிப்போட்டது. அதே நேரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. அதேபோல் குண்டடம் பகுதியிலும் பனித்துளிகளைப் போன்ற சாரல் பெய்தது. அப்போது பயங்கர சூறாவளிக்காற்று வீசியது.இந்தக் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேட்டுக்கடை, முத்துக்கவுண்டம்பாளையம், சந்திராபுரம், நந்தவனம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது கதிர் தள்ளிய நிலையில் இருந்த மக்காச் சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது மட்டுமின்றி இந்த போகமே வீணாகிப் போனதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.இது குறித்து தும்பலப்பட்டியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:–இழப்பீடு வழங்க வேண்டும்
இந்த போகத்தில் 2 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்தேன். மழை பொய்த்துப் போய் ஓரளவுதான் விளைந்திருந்தது. இந்த நிலையில் சூறாவளிக்காற்றால் மொத்த மக்காச்சோள பயிரும் சாய்ந்து விட்டன. இதனால் சுமார் ரூ.1.20 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டடம் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோளம் சாய்ந்து விட்டன.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment