Thursday, December 15, 2016
முத்தூர், நத்தக்காடையூரில் இருந்து பழையகோட்டை ஊராட்சி புதுவெங்கரையாம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் செல்வதற்கு தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலையின் குறுக்கே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இரண்டு புறமும் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. இதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த தரைப்பாலம் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பலத்த மழை பெய்தால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் இந்த தரைப்பாலத்தை மூழ்கிக்கொண்டு மேலே செல்லும். அப்போது இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக நத்தக்காடையூரில் இருந்து முத்தூர் சென்று அங்கிருந்து தாண்டாம்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. எனவே நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை சீரமைத்தும், பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment