Thursday, December 15, 2016
முத்தூர், நத்தக்காடையூரில் இருந்து பழையகோட்டை ஊராட்சி புதுவெங்கரையாம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் செல்வதற்கு தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலையின் குறுக்கே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இரண்டு புறமும் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. இதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த தரைப்பாலம் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பலத்த மழை பெய்தால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் இந்த தரைப்பாலத்தை மூழ்கிக்கொண்டு மேலே செல்லும். அப்போது இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக நத்தக்காடையூரில் இருந்து முத்தூர் சென்று அங்கிருந்து தாண்டாம்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. எனவே நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை சீரமைத்தும், பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment