Thursday, December 15, 2016
முத்தூர், நத்தக்காடையூரில் இருந்து பழையகோட்டை ஊராட்சி புதுவெங்கரையாம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் செல்வதற்கு தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலையின் குறுக்கே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இரண்டு புறமும் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. இதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த தரைப்பாலம் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பலத்த மழை பெய்தால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் இந்த தரைப்பாலத்தை மூழ்கிக்கொண்டு மேலே செல்லும். அப்போது இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக நத்தக்காடையூரில் இருந்து முத்தூர் சென்று அங்கிருந்து தாண்டாம்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. எனவே நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை சீரமைத்தும், பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment