Friday, December 16, 2016
On Friday, December 16, 2016 by Unknown in Tiruppur
அவினாசியில் கியாஸ் குடோன் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கியாஸ் குடோன் கட்ட எதிர்ப்பு
அவினாசி மடத்துப்பாளையம் சாலையில் தனியார் ஒருவர் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டி வருகிறார். குடியிருப்புகள் அதிகம் உள்ளதாலும், பள்ளி, கோவில் இருப்பதாலும் அந்த பகுதியில் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதன் பின்னரும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட கலெக்டெர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுகொடுத்தனர். இதற்கிடையில் தலித் விடுதலை கட்சியின் சார்பில் மடத்துப்பாளையம் ரோட்டில் குடியிருப்புகள் உள்ள இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட அனுமதிக்கக்கூடாது என அவினாசி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
முற்றுகை
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று குடோன் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. அப்போது அந்த பகுதி மக்கள் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இருப்பினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்றனர்.
அங்கு செயல் அலுவலர், மற்றும் அலுவலர்கள் யாரும் இல்லாததால் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் நீண்ட நேரமாகியும் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் விரக்தியுடன் பொதுமக்கள் கலைந்துசென்றனர். கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டும் பிரச்சினை தொடர் கதையாக உள்ளதால் அவினாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment