Monday, December 11, 2017
திருச்சி 11.12.2017
செயின் பறிப்பு கொள்ளையர்கள் இருவர் கைது
நகைகள் மற்றும் இரு சக்கர வாகனம் மீட்பு
திருச்சி மாநகரத்தில்; தனியாக செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.யு.அமல்ராஜ்; உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
மேற்படி செயின் பறிப்பு தொடர்பாக 09.12.2017-ம் தேதி காலை பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய்பாபா கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக TN-55-S-9514 என்ற இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர்களை இரகசிய தகவலின்பேரில் நிறுத்தி விசாரிக்க அவர்கள் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த பிரின்ஸ் (27/17)த/பெ.மார்ட்டின் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த ராஜதுரை (55/17)த/பெ.கோபால் எனவும் அதில் பிரின்ஸ் என்பவர் திருச்சி மாநகரம் காந்திசந்தை காவல்நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் அவருக்கு கண்டோன்மெண்ட் திருவெறும்பூர் அமர்வு நீதிமன்றம்பெரம்பலூர்பாடாலூர் ஆகிய காவல்நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்தது.
மேற்படி நபர்களை விசாரிக்க கடந்த 04.08.2017-ம் தேதி 1) செந்தண்ணீர்புரம் பாலம் அருகில்பைபாஸ் ரோடு 2) கே.கே.நகர் பகுதி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் மற்றும் கடந்த 02.12.2017-ம் தேதி 3) ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஜெயம் மளிகை கடை, குளாப்பட்டி ரோடு ஆகிய இடங்களில் தனியாக சென்ற பெண்களிடம் கழுத்திலிருந்து செயின்களை பறித்து சென்றதாக கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அவர்களின் வசமிருந்து ரூ. 200000மதிப்புள்ள 10¼ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் அவர்கள் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய வTN-55-S-9514 என்ற இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகளை 09.12.2017-ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்படி தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தும்அவரிடமிருந்து மேற்படி திருட்டு சொத்துக்களை கைப்பற்றிய தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


0 comments:
Post a Comment