Thursday, September 13, 2018
திருச்சி 13.09.18
திருச்சி மலைக்கோட்டை
உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையலிடப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில்கள் மிகவும் பிரசித்தமானவை. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த கோயில்களில் சிறப்பாக நடை பெறும்.
இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 150 கிலோ எடையில் கோயிலின் மடப்பள்ளியில் பிரம்மாண்டமான கொழுக் கட்டை தயார் செய்யும் பணி இருதினங்களாக நடைபெற்று வந்தது. இதனை சரிபாதியாகப் பிரித்து மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையல் செய்யப்பட்டது.
கோயிலின் மடப்பள்ளியில் இருந்து இந்த பிரம்மாண்ட கொழுக்கட்டையை துணியில் மூட்டையாகக் கட்டி தொட்டில் போன்று வைத்து அதனை உச்சிப் பிள்ளையார் சன்னதிக்கு தூக்கிச் சென்றனர்.
கொழுக்கட்டை படையல் போடப்பட்டு,மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை
உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையலிடப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில்கள் மிகவும் பிரசித்தமானவை. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த கோயில்களில் சிறப்பாக நடை பெறும்.
இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 150 கிலோ எடையில் கோயிலின் மடப்பள்ளியில் பிரம்மாண்டமான கொழுக் கட்டை தயார் செய்யும் பணி இருதினங்களாக நடைபெற்று வந்தது. இதனை சரிபாதியாகப் பிரித்து மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையல் செய்யப்பட்டது.
கோயிலின் மடப்பள்ளியில் இருந்து இந்த பிரம்மாண்ட கொழுக்கட்டையை துணியில் மூட்டையாகக் கட்டி தொட்டில் போன்று வைத்து அதனை உச்சிப் பிள்ளையார் சன்னதிக்கு தூக்கிச் சென்றனர்.
கொழுக்கட்டை படையல் போடப்பட்டு,மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...



0 comments:
Post a Comment