Wednesday, February 19, 2020

On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 19-02-2020

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் ஆட்சியர் அலுவலகம்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சியிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், முழக்கப் போராட்டம், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

 இந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி ஜமாத்துல் உலமா அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி ஜமாத்துல் உலமா தலைவர் ரூஹில் ஹக் தலைமை வகித்தார். இதில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தக் கருப்புச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அதற்கான பலனை அதிமுக அனுபவிக்க நேரிடும் என்று போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

0 comments: