Wednesday, February 26, 2020

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
*திருச்சி மக்கள் ஏமாந்தல் காவல்துறை பொறுப்பேற்குமா ? டிஜிபி அனுமதி அளித்தாரா?  உண்மையை கண்டு பிடிக்குமா திருச்சி காவல்துறை ?*

தஞ்சை காவல்துறையினர் பொய்யான வழக்கு தொடுத்துள்ளனர்.

நாங்கள் டிஜிபி சந்தித்து வந்துவிட்டோம் நம்முடைய கூட்டங்கள் தமிழகத்திலிருந்து அனைவரும் திருச்சி மையமாக வைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று டிஜிபியிடம் நாங்கள் உத்தரவு பெற்றுள்ளோம் அதனை திருச்சி காவல்துறை அதிகாரிகளுக்கு அதனை காண்பித்து விட்டோம் நான் தொடர்ச்சியாக திருச்சியில் கூட்டம் நடத்துவோம் என அழகர்சாமி என்கிற ராஜா, ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இருவரும் தங்கள்  டீம் லீடர் களிடம் கூறி வருவதாக எல்பின் வட்டாரத்தில் கூறப்படுகிறது. உண்மையில் டிஜிபியிடம் அனுமதி வாங்கினர்களா என்பது அவர்களுக்கும் டிஜிபிக்கும் மட்டுமே தெரியும்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திருச்சியில் இவர்கள் எப்படி கூட்டம் நடத்தி வருகிறார்கள் உண்மையாகவே காவல்துறை உயர் அதிகாரியிடம் (DGP) அனுமதி பெற்று உள்ளனரா ? இவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் தஞ்சையில் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து எல்பின் நிறுவனத்திற்கு எதிராக அழுத்தம் கொடுப்பது ஏன் என்பது பொதுமக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. திருச்சியில் இன்று கூட பீரிஸ் ஹோட்டலில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

 காவல்துறை உயரதிகாரிகள் இதுபோன்ற நபர்களை தீவிர விசாரணை செய்து பொதுமக்களை காக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து



பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் என்னை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

0 comments: