Monday, March 09, 2020

On Monday, March 09, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி பல 100 கோடி சொத்து சேர்த்து வலம் வரும் போலி நிறுவனம் தான் எல்பின்.

இதன் நிறுவனர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் அவரது தம்பி எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார்

இருவரும் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்து சுதந்திரமாக தற்போது துபாய் சென்று உள்ளனர். நாளை துபாய் சென்ற 800 லீடர்களும்  தாய் நாடு திரும்புவதாக  தகவல். அதாவது சென்னை திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் துபாய் விமானம் முலம்  வருகை. இதில்  எத்தனை பேர் கொரோனா வைரஸ்யுடன் வருகிறார்கள் என்பது தெரியவில்லை.

தஞ்சையில் இவர்கள் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக தஞ்சை மாவட்ட லீடர்கள் பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 பின் எல்பின் நிறுவனர் அழகர்சாமி யால் பலகோடி ரூபாய் செலவு செய்து ஜாமினில் வெளி வந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி சத்யபிரியா  தலைமறைவாக இருந்தார். கடந்த வாரம் ஜாமீனில் வந்த பிரசன்ன வெங்கடேஷ், கிங்ஸ்லி மற்றும் தலைமறைவாக இருந்த சத்யபிரியா ஆகியோர்


காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி துபாய் சென்று உள்ளனர்.


இந்நிலையில் துபாய் சென்ற அனைவரும் நாளை சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.

 காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் வெளிநாடு சென்ற பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி

 கைது செய்யப்படுவார்களா ? அதேபோல் தலைமறைவாக இருந்த சத்திய பிரியா ( நேற்றுவரை துபாயில்  ஜாமீன் கிடைக்கும் வரை  இருப்பதாக தகவல் கிடைத்தது) 

தற்போது  எல்பின் நிறுவன சகோதரர்கள் அழகர்சாமி என்கிற ராஜா எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் தமிழகம்  வரச்சொல்லி  இருப்பதால் தமிழ்நாட்டில்  அல்லது வேறு மாநிலத்தில் விமான நிலையம் வந்து இறங்கி தான் ஆக வேண்டும் இவர்களை  சட்டத்திற்கு புறம்பாக  நடக்க வலியுறுத்திய எல்பின் சகோதரர்களும் பிரசன்ன வெங்கடேஷ்  கிங்ஸ்லி  சத்திய பிரியா  அவர்களுடன் கைது செய்யப்படுவார்களா என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்புகளை  தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கண்டிப்பாக செயல்படுத்துவார்கள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை.

0 comments: