Sunday, March 08, 2020

On Sunday, March 08, 2020 by Tamilnewstv in    
சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா தொடங்கியது.


பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின்  பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள் பூமாரி பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின்  பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள்  பூமலை பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வந்து அம்மனிடம் வேண்டுபவை உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோயிலில்  நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது பூச்சொரிதல் விழா ஆகும். ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28நாட்கள்  பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாய அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், ஈஸ்வரனை நோக்கி அம்பாள் 28நாள் விரதமிருப்பதாக ஐதீகம், இவ்விரதகாலத்தில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் இன்றி இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படும். தங்களின் நலனுக்காக விரதமிருக்கும் அம்மனை வாழ்த்தி பூக்களை தூவி பக்தர்கள் வழிபடுவதே பூச்சொரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது
அதன்படி இன்று காலை விக்னேஷ்வரா பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்சொரிதல் விழாகோலாகலமாக துவங்கியது.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் சமயபுரம் கோவில் இணைஆணையர் அசோக்குமார்  தலைமையில் கோயில் பணியாளர்கள், கிராமமக்கள் உள்ளிட்டோர் யானை மீதும், அவரவர் தலையில் பூந்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று  ஆலயத்தை வந்தடைந்து அங்கு அம்மனுக்கு சாற்றப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. 

    அதனைத்தொடர்ந்து இன்றுமுதல் திருச்சி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவரும் பூக்களைக்கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

     பூச்சொரிதல் விழாவையொட்டி பலத்தபோலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

        ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூச்சொரிதல் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு 50 திற்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக குடிநீர்,நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்துள்ளனர்.

0 comments: