Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா  குறித்து அரசு சார்பிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது.


இதைத் தொடர்ந்து சமூக அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
 திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
 இந்த அமைப்பு தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யோகா குரு கிருஷ்ணகுமார், திருச்சி மாவட்ட பணத்தாள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை அளித்தனர்.

0 comments: