Saturday, March 21, 2020
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களிடம் இது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டு இருப்பதால் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுய உதவிக்குழு, தினசரி பைனான்ஸ் கந்து வட்டி போன்றவர்களிடம் கடன் பெற்றுள்ளனர். இந்த கடன் வசூலை ஒருமாத காலம் நிறுத்தி வைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாதங்களுக்கு பூட்ட வேண்டும். மக்களுக்கு அத்தியாவசியமான மாஸ்க் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவற்றை இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அதில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களிடம் இது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டு இருப்பதால் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment