Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 31

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு அவசர கால விமான சேவை -
மலிண்டோ விமானம் மூன்று நாட்களுக்கு இயக்கம்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விமானங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் கடந்த 24ம் தேதி முதல் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்களில் இயங்காத நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமானத்தில் சேவை மட்டும் அவசரகால சேவையாக வரும் ஏப்ரல் 1, 2,4 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிறப்பு சேவை இயக்கப்பட இருக்கிறது இந்த விமானம் மலேசியாவில் இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 10 35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11 25 மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் எனவும் இதேபோன்று ஏப்ரல்
2மற்றும் 4ம் தேதிகளில் காலை 9.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு காலை 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments: