Wednesday, September 06, 2023
தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் மு . கண்ணபிரான் பாண்டியன் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று 05.09.2023ல் வழக்கறிஞர் ஓ .முத்துவேல்.. பொதுச் செயலாளர் அவர்கள் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் குழுமணி
அ. அருண்குமார் அவர்கள் ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் மல்லை சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Monday, July 31, 2023
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி
28.7.2023 குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது இதில் தலைவர் துணைத் தலைவர் இணைச் செயலாளர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது
388 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன் மூத்த வழக்கறிஞர்கள் மதிப்பிற்குரிய பெண் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் மேலும் சங்க வளர்ச்சிக்காக அனைத்து மதிப்பிற்குரிய மூத்த வழக்கறிகளையும் வழிகாட்டுதலின்படி இளம் வழக்கறிஞரின் கூட்டு பலத்துடன் திறன்பட செயல்படுவோம்
மேலும் பெண் வழக்கறிஞர்கள் குற்ற வழக்கறிஞர்கள் நபர்கள் கூடி விட்டதால் அவர்களுக்கு பார் அருகிலேயே தனி அறை ஏற்படுத்தித் தருவோம் திறம்பட செயலாற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என்று திருச்சி குற்றவியல் சங்க செயலாளர் திரு வெங்கட் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது சட்ட உரிமை பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் அருண் சித்தார்த்தா மற்றும் பெண் வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்
பேட்டி .....குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு வெங்கட்
Saturday, August 20, 2022
*போதை பொருள் ஒழிப்பு -டிஜிபி ஆலோசனை கூட்டம்*
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு கொடுத்து மக்களுக்காக பணியாற்றி வருகிறது.
தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவுபடி தமிழக முழுவதும் போதைப் பொருள்கள் தடுப்பதற்கு மற்றும் பொதுமக்களிடையேவும் மாணவ மாணவியர் சமுதாயத்தினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் விழிப்புணர்வுகள் மாவட்ட ரீதியாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக
அனைத்து காவல் அதிகாரிகளுடன் இணையதள ஆலோசனை கூட்டம் ,டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர், ஆவடி காவல் ஆணையர், தாம்பரம் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை இயக்குநர், அனைத்து சரக ஐ. ஜி க்கள், டிஐஜி க்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Sunday, June 19, 2022
திருச்சி
எல்ஃபின் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து "முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை திருச்சியில் துவக்கினர்.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் தனியார் நிதி நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் இயங்கி வந்தது. இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் எங்களின் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு பன்மடங்கு திருப்பி தரப்படும் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறியதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில்
இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தனர். ஆனால் டெபாசிட் செய்தவர்களின் முதிர்வு காலம் முடிந்த நிலையிலும், பலருக்கு பணம் திரும்பி தரப்படாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் பணம் திருப்பி கிடைக்காத ஆத்திரத்தில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் எல்ஃபின் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தின் உரிமையாளரான ராஜா மற்றும் ரமேஷ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் தொடுத்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0003161010 & 0006833411, Infi Galaxy marketing India pvt ltd
Chennai என்று இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர் .
மேலும் எல்பின் மற்றும் அறம் மக்கள் நலச்சங்கம் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மீது விருதுநகர் மாவட்டம் E.O.W 8/2015 திருச்சி E.O.W 1/2019 பெரம்பலூர் 69/2019 மதுரை மாவட்டம் C.C.B 49/2019 தஞ்சாவூர் மாவட்டம் குற்றப்பிரிவில் 1/2020 மதுரை சிட்டி அவனியாபுரம் காவல் நிலையம் 218/2020 திருச்சி உறையூர் காவல் நிலையம் 104/2020 திருச்சி உறையூர் காவல் நிலையம் கன்டோன்மென்ட் நிலையத்தில்554/2020 மதுரை சிட்டி கே புதூர் 25/2021 மதுரை சிசிபி 49/2019, 12/2021 ,2/2022 சிவகங்கை மாவட்டம் என்று இவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் மேல் நிலுவையில் உள்ள போதும் இதனால் வரை சொத்துகள் முடக்க வில்லை ரெவின்யூ காவல்துறை பத்திரப்பதிவு அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை.
இந்நிலையில் எல்ஃபின் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து புதிதாக முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியுள்ளனர். இந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள அமோக திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிதா பொருளாளர் ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலிருந்து எல்ஃபின் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பங்குதாரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பொருளாளர் ஹேமா கூறுகையில்
முதல் முதலில் புகார் அளிக்க வேண்டும் பிறகு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பது இருக்கிறது அத்தனையும் கடந்து வந்தால் தான் அவர்களுக்கு பணம் திருப்பி பெற முடியும் மக்களுக்கு ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு கொடுப்பதற்காக தான் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி படைக்கும் எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் துரித நடவடிக்கை எடுத்து எங்களுக்கு எங்களுடைய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்.
காலத்திற்கான நீதி எங்களுக்கு கிடைக்க வேண்டும் காலந்தாழ்த்தி நீதி கிடைத்தாலும் அது அநீதி தான் அதற்காக தான் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைத்து உள்ளோம் எங்களுடைய ஒத்துழைப்பு இன்றைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்டு எங்களுடைய வேதனையும் வலியும் புரிந்து கொண்டு இந்த வழக்கை சிறப்பு வழக்காக நடத்தி எங்களுக்கு எங்களுடைய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
உறவு முறைகளை கூறி ராஜா என்கிற அழகர்சாமி ,எஸ் .ஆர்.கே ரமேஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் எங்களுடைய நகையெல்லாம் விற்கத் செய்து பணத்தை முதலீடு செய்ய கூறி ஆசை வார்த்தைகள் தூண்டி முதலீடு செய்தால் அதற்குரிய தண்டனையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் ஏராளமானோர் இதனால் பாதிக்கப்பட்டு ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன கல்லூரிகளுக்கு படிப்பு படிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் செயலாளர் கவிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதலீட்டு செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுது அவர்கள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதனை வழிகாட்டவே இந்த சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எல்ஃபின் நிதிநிறுவனம் பொதுமக்களிடம் கோடிகணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளனர் அதற்காக நாங்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினோம் தனித்தனியாக செயல்பட்டு பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம் எங்களை போலவே பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பலர் புகார் கூட அளிக்கவில்லை அவர்களுக்கு எப்படி புகார் அளிப்பது என்கிற ஆலோசனை வழங்கப்படும். எங்களுக்கான தனி விசாரணைக் அமைக்கப்பட்டுள்ளது அந்த விசாரணையை எப்படி மேற்கொள்ள வேண்டும் பலருக்கு இந்த விசாரணைக் குழு அமைத்தது தெரியவில்லை பாதிக்கப்பட்ட நபர் களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த சங்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். முழு ஒத்துழைப்பையையும் விசாரணை குழுவுக்கு அளிப்போம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
பேட்டி:- கவிதா
முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்க செயலாளர்
Wednesday, January 12, 2022
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை திரு பிசினஸ் சர்வீஸ் வெல்பர்
அசோஷியேஷன் நிர்வாக குழு சார்பில் சங்கத்தின் செயலாளர் திரு. ஷோக்கத் அலி தலைமையில் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டம் பணி குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இத்திட்டத்தின் வாயிலாக பயனடைய பொதுமக்களுக்கு, வியாபார பெருமக்களுக்கு வங்கிகளின் கடன் பெரும் சலுகைகளின் பணி குறித்தும் பணி ஆரம்பக் கூட்டம் நடை பெற்றது
பொதுமக்களுக்கு இத்திட்டம் சேர்ந்து அடையும் வண்ணமாக ஆலோசகர்கள் நியமனம் செய்து இத்திட்டத்தை பற்றி விளக்கமாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்திட கூட்டம் நடைபெற்றது
மேலும் இந்த கூட்டத்தில் பங்குபெற்ற நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது நடைபெற்ற கூட்டத்தில் கடன் பெறுவது குறித்தும் இத்திட்டம் பயனாளிகளுக்கு சேர்ந்து அடையும் விதமாக ஆலோசனைகள் கூறப்பட்டது பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு முகவர்கள் ஆண்கள் பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
Sunday, November 14, 2021
குழந்தைகள் தின விழா ஓவியப்போட்டியில் தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்திய பிஞ்சு குழந்தைகள்.....
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பாங்க் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது இந்த ஓவிய போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினர் இதற்கான ஏற்பாட்டை பேங்க் ஆப் இந்தியா சிலை கிளையின் ஊழியர்கள் செய்திருந்தனர்
கிளை மேலாளர் மணிவண்ணன் பாங்க் ஆப் இந்தியா கூறுகையி்ல் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது
குறைந்த வட்டியில் லோன் பற்றிய விழிப்புணர்வாக குழந்தைகள் வீடுகள் மற்றும் கார் படங்கள் வரைந்து காட்டினர் இந்த ஓவியப் போட்டியில் சிறப்பு ஓவியங்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என கிளை மேலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
Sunday, July 25, 2021
உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக திருச்சியில் கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி சேர்மென் A.மனோகரன் மற்றும் சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் சேர்மேன் Dr.A. பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக சேர்மன் Dr.A.M.ராய் பெர்னான்டோ அவர்கள் தலைமையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் தர்ஷிகா (10) சிறுவயதில் இருந்தே யோகா, தியானம் மீது ஆர்வம் கொண்ட இவர் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் உள்ள நிலையில் யோகா மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு செய்ய தர்ஷிகா முடிவு செய்து சேலம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவி தர்ஷிகா பத்மாசனமிட்டு தலையில் தக்காளி பழத்தை வைத்து முப்பத்தி ஒரு நிமிடம் (31) யோகாசனம் செய்து பதஞ்சலி புக் ஆப் வேர்ல்டு ரெக்காட்ஸ் இடம்பெற்று கேடயம் வழங்கப்பட்டது. மற்றும் திருச்சி மேலப்புதூர் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் சுகித்தா. இவர் கடந்த மூன்று வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை தனது சிலம்ப ஆசான் கலைசுடர்மணி திரு.எம்.ஜெயக்குமார் அவர்களிடம் முறைபடி சிலம்பத்தை கற்று தேர்ந்து சிலம்பத்தில் 5 புதிய உலக சாதனைகளும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கற்று தங்கம் வென்று, மேலும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்ப போட்டிகளில் பங்குபெற்று இதுவரை 25 தங்கம் 12 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.
இவரை நமது இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி உயர்திரு. வெங்கையா நாயுடு அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி பிஸ்டல் சுடும் போட்டியில் பங்கு பெற்றும் தங்கம் வென்றுள்ளார். மேலும் யோகா குருஜீ கிருஷ்ணகுமார் அவர்களின் பயிற்சியில் யோகாவில் புதிய உலக சாதனையும் செய்துள்ளார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முன்னோடி பெண்மனி விருதும் கொடுத்து கௌரவ படுத்தியுள்ளார்கள்.
இவர் தான் கற்ற சிலம்ப கலையை தனது மூத்த ஆசான் ஜெயக்குமார் அவர்களின் அறிவுரை படி இலவசமாக பல அரசு பள்ளிகளுக்கும் சென்று கற்று கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனது 13 வயதிலேயே இத்தனை சாதனைகளை புரிந்த மோ.பி.சுகித்தா அவர்களுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக இளம் கௌரவ டாக்டர் பட்டமும், மேலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவில் மூன்று தலைமுறையாக வசித்து வரும் கலைமாமணி அன்பழகன் குப்புசாமி அவர்கள் தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை நன்கு கற்றறிந்து தான் கற்ற சிலம்ப கலையை மலேசியாவில் 8 மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் சிலம்பக் கோர்வை கழகம் என்கிற அமைப்பைத் துவங்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 100க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்களையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது பல சிலம்ப போட்டிகளில் தனது மாணவர்களைப் பங்கெடுக்கச் செய்தும் சர்வதேச போட்டிகளை நடத்தியும் அதில் வெற்றி பெற வைத்ததைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.
மேலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அயோத்தி அவர்களின் மகன் ராஜலிங்கம் அவர்கள் மலேசியாவில் குடியுரிமை பெற்று மலேசியாவில் கடந்த 20 வருடங்களாக கம்யூனிகேஷன் துறையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மலேசியாவில் தனது தொழிலை திறம்பட நடத்தி வருகின்றார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மலேசியாவில் திறம்பட தொழில் செய்வதை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் பெறனர். இந்த பட்டமளிப்பு விழாவை திருச்சி ருத்ர சாந்தி யோகாலையா குருஜீ கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
Friday, May 08, 2020
Saturday, April 18, 2020
முசிறி அருகே விழுப்புரத்திற்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்.நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஐந்து பேர் விழுப்புரத்திற்கு நடந்து சென்றனர்.
இவர்களை கண்ட சமூக ஆர்வலர்கள் உணவு வாங்கிக் கொடுத்து விழுப்புரத்துக்கு அழைத்து சென்று உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (65) ,விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் மனைவி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்டம் ,பவுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் .தற்போது வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லதம்பி வேலை வாய்ப்பின்றி சிரமப்பட்டு உள்ளார். போக்குவரத்து தடை செய்யபட்ட நிலையில் விழுப்புரம் அருகே உள்ள சொந்த ஊரான திருக்கோயிலூர் சென்றுவிட கூலித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரும் நடை பயணமாகவே விழுப்புரத்திற்கு செல்ல தீர்மானித்து பயணத்தை தொடங்கினர். சுமார் 150 கிலோ மீட்டர் நடை பயணத்திற்கு தயாரான தொழிலாளர்கள் மனதில் இருந்த நம்பிக்கை அளவிற்கு உடலில் தெம்பில்லாமல் மிகுந்த சோர்வுடன் திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் நடந்து சென்றுள்ளனர். இவர்களை பார்த்த போலீசார் அதே பகுதியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் சமுக தொண்டு நிறுவணத்தின் உதவியுடன் உணவு வாங்கிக் கொடுத்து ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து விழுப்புரம் அருகே உள்ள திருக் கோவிலூர் கிராமத்தில் கொண்டு விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். கூலித் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லாத நிலையில் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய தா.பேட்டை போலீசார் மற்றும் வாசவி கிளப் குழுவினர்களுக்கு கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
Tuesday, April 07, 2020
திருச்சியில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைகப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தைகள்,திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269 கடைகள் , மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
எனவே நாள்தோறும் ஏராளமான நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்து மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி தெளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே அதனை எளிதாக்கும் வகையில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதேபோன்று அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் இந்த கிருமிநாசினி சுரங்கம் தொடர்ச்சியாக மருத்துவமனை நேரங்களில் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள் இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் பல இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.
Wednesday, April 01, 2020
திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு -1000 நபர்கள் கைது -
10இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும்
கடைகள் - மாநகர காவல்துறை ஆணையர்
இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்சி மாநகரத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சமூக விலகலை
கடைபிடிக்க வேண்டி மார்ச் 25-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளின்றி
வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு
கடந்த 24-ந்தேதி அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை வாகனங்கள் மற்றும்
தனியார் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு
பொதுமக்களுக்கு திருச்சி மாநகரம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
மேலும், அரசின் உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில்
சுற்றித்திரிந்ததற்காக திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1000 நபர்கள் கைது
செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்968 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகர்
மாநகர ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,08,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி தேவையில்லாமல் வெளியே வருவதை
தவிர்க்கும்படியும், மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர
காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி
10இடங்களில்
(1.மதுரம் மைதானம், கீழப்புலிவார்டு ரோடு, 2. அண்ணா நகர் உழவர் சந்தை, தென்னூர், 3. அண்ணா
விளையாட்டரங்க முன்புறம், 4. கே.கே.நகர் உழவர் சந்தை, 5.மத்திய பேருந்து நிலையம், 6.எஸ்.ஐ.டி.
மைதானம், அரியமங்கலம், 7.பிஷப்ஹீபர் கல்லூரி மைதானம், புத்தூர், 8.சத்திரம் பேருந்து
நிலைய சுற்று வட்டாரப் பகுதி,
9.N.S.மேல்நிலைபள்ளி மற்றும் 10. ஸ்ரீரங்கம் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் சில்லறை விற்பனை சந்தைகள் செயல்பட்டு
வருகிறது. மேற்படி இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி காவேரி பாலத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் நாளை முதல்
(02.04.2020) இயங்காது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேற்கண்ட
இடங்களில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகள் காலை 06.00 மணிமுதல் மதியம் 02.30
மணிவரை செயல்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறதுமேலும் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து,
தேவையற்ற பிற நடமாட்டங்களை குறைக்கும் வகையிலும் மாநகரில் வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.
Tuesday, March 31, 2020
திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு அவசர கால விமான சேவை -
மலிண்டோ விமானம் மூன்று நாட்களுக்கு இயக்கம்
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விமானங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் கடந்த 24ம் தேதி முதல் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்களில் இயங்காத நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமானத்தில் சேவை மட்டும் அவசரகால சேவையாக வரும் ஏப்ரல் 1, 2,4 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிறப்பு சேவை இயக்கப்பட இருக்கிறது இந்த விமானம் மலேசியாவில் இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 10 35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11 25 மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் எனவும் இதேபோன்று ஏப்ரல்
2மற்றும் 4ம் தேதிகளில் காலை 9.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு காலை 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Friday, March 27, 2020
இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடிய பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் தீயணைப்புத்துறை வீரர்களால் பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Thursday, March 26, 2020
திருச்சி அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் அருகில் உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -தஞ்சை சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடி, திருச்சி- மதுரை ரோட்டில் விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -கரூர் ரோட்டில் முக்கொம்பு அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகியவை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Tuesday, March 24, 2020
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை,
மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை,
ஹெச்.ஏ.பி.பி, தொழிற்சாலைகள்
கொரனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்களுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில்
கடந்த 1926 ம் துவக்கப்பட்டு நூற்றாண்டு காண உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில், ரயில் இஞ்ஜின் பழுதுநீக்குதல், ரயில் பெட்டி தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இதில் சுமார் 4ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது கொரனாவைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
இன்று முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் நுழைவாயில் மூடப்பட்டு பணிமனை வெறிசோடி காணப்படுகிறது.
விடுமுறை குறித்த தகவல் தெரியாத சில பணியாளர்கள் பணிமனைக்கு வந்து திரும்பி சென்றனர்.
அசாதாரண சூழல் காரணமாக
தொடர்ந்து 3 நாட்கள் பணிமனைக்கு விடுமுறை விடப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
இதே போல்
திருவெறும்பூர் அருகே சுமார் 900க்கு மேற்பட்டோர் பணி புரியும் மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை, மற்றும் 2000க்கு மேற்பட்டோர் பணிபுரியும் ஹெச்.ஏ.பி.பி தொழிற்சாலைகள் கொரொனோ வைரஸ் பீதி காரணமாக இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட பணிகளை பார்க்கும் தொழிலாளர்கள் மட்டுமே வந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...