Tuesday, March 24, 2020

On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 23

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை,
மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை,
ஹெச்.ஏ.பி.பி, தொழிற்சாலைகள்
 கொரனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்களுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
                    

ஆங்கிலேயர் காலத்தில்
கடந்த 1926 ம் துவக்கப்பட்டு நூற்றாண்டு காண உள்ள   பொன்மலை  ரயில்வே பணிமனையில், ரயில் இஞ்ஜின் பழுதுநீக்குதல், ரயில் பெட்டி தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இதில் சுமார் 4ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

                  

தற்போது கொரனாவைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
 இன்று முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக  பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் நுழைவாயில் மூடப்பட்டு பணிமனை வெறிசோடி  காணப்படுகிறது.
விடுமுறை குறித்த தகவல் தெரியாத சில பணியாளர்கள் பணிமனைக்கு வந்து திரும்பி சென்றனர்.

அசாதாரண சூழல் காரணமாக
தொடர்ந்து 3 நாட்கள் பணிமனைக்கு விடுமுறை விடப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

இதே போல்
திருவெறும்பூர் அருகே சுமார் 900க்கு மேற்பட்டோர் பணி புரியும் மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை, மற்றும் 2000க்கு மேற்பட்டோர் பணிபுரியும் ஹெச்.ஏ.பி.பி தொழிற்சாலைகள் கொரொனோ வைரஸ் பீதி காரணமாக இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட பணிகளை பார்க்கும் தொழிலாளர்கள் மட்டுமே வந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.


0 comments: