Tuesday, April 07, 2020

On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி

திருச்சியில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைகப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்கள் வரவேற்பு  தெரிவித்துள்ளனர்.

கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தைகள்,திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269  கடைகள் , மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.



எனவே நாள்தோறும் ஏராளமான நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்து மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.  அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி தெளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே அதனை எளிதாக்கும் வகையில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா  தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
 கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது.  அதேபோன்று அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் இந்த கிருமிநாசினி சுரங்கம் தொடர்ச்சியாக மருத்துவமனை நேரங்களில் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள்  இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் பல இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.

0 comments: