Tuesday, April 07, 2020

On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 07

நிவாரணம் வழங்க கோரி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

கொரனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் கடைகளை அடைத்து வைத்துள்ளோம்.


இதனால்  இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் குடும்பத்தினர்
சுமார்10 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் கடை, மற்றும் வீட்டு வாடகை கட்ட முடியாமலும், தேவையான எதையும் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். தமிழக முதல்வர் அமைப்பு சாரா நவாரிய சங்கத்திற்கு    அறிவித்துள்ள உதவிகளை எங்களுக்கும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பேட்டி பாலசுப்ரமணியம்.
 மாவட்ட செயலாளர்.


0 comments: