Tuesday, March 31, 2020
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 31
வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலித் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் பலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் இவர்களும் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பணமின்றி கஷ்டப்படும் சூழலில், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.தற்போது, வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மாதத்திற்கான வாடகையைக் கேட்டு நெருக்கடி கொடுக்கலாம் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி சரக காவல்துறை, டிஐஜி பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழ்நாடு, வெளிமாநில தொழிலாளர்கள் என யாரிடமும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது. ஒரு மாத காலத்துக்கு வாடகையும் கேட்கக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இதனை மீறி வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்தால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலித் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் பலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் இவர்களும் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பணமின்றி கஷ்டப்படும் சூழலில், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.தற்போது, வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மாதத்திற்கான வாடகையைக் கேட்டு நெருக்கடி கொடுக்கலாம் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி சரக காவல்துறை, டிஐஜி பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழ்நாடு, வெளிமாநில தொழிலாளர்கள் என யாரிடமும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது. ஒரு மாத காலத்துக்கு வாடகையும் கேட்கக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இதனை மீறி வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்தால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment