Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
*பொதுச் செயலாளர் மணிமாறன் அவர்களின் அறிக்கை*

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் அவர்களுக்கும் நாட்டுடைமை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர் மற்றும்
 பொதுத்துறை வங்கிகளின்  மேலாண்மை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்
நிதிச் சேவைகள் துறை,  நிதி அமைச்சகம், புதுதில்லி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது



*பல பொருளாதார நடவடிக்கைகள், வங்கிகளின் வருவாயினையும், ஊழியர் பலன்களையும் பாதிக்கும் என்ற வாதம் வைக்கப்படலாம் என்ற சூழ்நிலையிலும், வங்கிப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் தொழிற்சங்கங்கள், கடினமான நிலையில், நாட்டுப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.*

ஏமாற்றமளிக்கும் இன்னலான சூழலிலும், வங்கிப்பணிகளை ஊக்குவிக்க, கீழ்க்கண்டவற்றைக் கனிவுடன் பரிசீலித்து செயலாக்கப்படுத்த ஆவன செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்:

*1. வங்கித் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை, கிராம, தாலுகா, மாவட்டம், மாநில அளவிலான கமிட்டிகளில் நியமனம் செய்ய வேண்டுகிறோம்.*  இது அந்தந்த மட்டங்களில் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்கவும், வங்கிப் பணியாளர்களின் தன்னம்பிக்கையையும் வளர்த்து, மக்களுக்கும் நாட்டிற்கும் சிறப்பான சேவைகளை வழங்கத் தகுந்த சூழலை உருவாக்கும்.

2. CBS எனப்படும் ஒருங்கிணைந்த கணினி சேவையால், *5 கிமீ  வட்டாரத்தில், ஒரு வங்கிக்கு ஒரு கிளை திறந்திருக்கும் என்ற அடிப்படையில், பெருநகர, நகர், புறநகர் பகுதிகளில், அனைத்து வங்கிகளிலும் செயல்படுத்த வேண்டுகிறோம்.*

*3. கிராமப்புற கிளைகளில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்க வேண்டுகிறோம்.*

4. மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல, *சில மாநில அரசுகள் தனிப்பட்ட பேருந்துகளை இயக்குகின்றன.  இந்தச் சேவைகளை வங்கியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுகிறோம்.*

5. *வங்கிப்பணியாளர்களை பெருநகரங்களிலும், கிராமங்களுக்கும் சென்று வர உதவியாக, வங்கிகளே தக்க கூட்டுப் பயண வாகன ஏற்பாடுகளைச் செய்து தர தக்க அனுமதியும் பாதுகாப்பும் தர வேண்டுகிறோம்.*

*6. கர்ப்பிணிப்பெண்கள், 2 வயதிற்குக் குறைவான  வயதுடைய குழந்தைகளுடைய பெண்கள், 55 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா, நீரிழிவு நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், நாள்பட்ட நோயாளிகள், ஆகியோருக்கு, விசேஷ விடுப்பு அளிக்கப்பட்டு, பணிக்கு வருவதிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுகிறோம்.*

7. அனைத்து வங்கிக்கிளைகளும் *அதிகபட்ச சுகாதார நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.  மேலும் அடுத்த மாத முதல்வார நெரிசலை சமாளிக்கத் தேவையான பாதுகாப்பு (தேவையெனில் தனியார் நிறுவனங்கள் மூலம்) ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுகிறோம்.*

8. எதிர்பாராத செலவுகளை சமாளிக்க, அனைத்து வங்கிகளும் தங்களது *பணியாளர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தினை வட்டியில்லா முன்பணமாக வழங்க வேண்டுகிறோம்.*

*9. பணியாற்றிய 6 நாட்களுக்கு ஒரு நாள் வீதம், அனைத்து வங்கிப் பணியாளர்களுக்கும் கவுரவ ஊதியம்  வழங்கப்பட வேண்டும்.*

10. மற்ற இன்றியமையாப்பணியாளர்களுக்கு அளிப்பது போன்று, *வங்கிப் பணியாளர்களுக்கும், ரூபாய் 50 லட்சம், உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படவேண்டுகிறோம்.  இதற்கான பிரீமியம் தொகையினை, அந்தந்த வங்கிகளே செலுத்த வேண்டுகிறோம்.*

11.  கூடுதலாக ஏற்பட்டுள்ள செலவுகளைச் சமாளிக்க, *வங்கிப்பணியாளர்கள் பெற்றுள்ள கடன் தவணைகள் மூன்று மாதங்களுக்குப் பிடிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட வேண்டும்.*

12. ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாமல், தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வங்கியாளர்கள், மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

13. தன்னார்வமாக முன்வரும் ஓய்வு பெற்ற பணியாளர்களை, அருகிலுள்ள கிளைகளில், தக்க கவுரவ ஊதியத்துடன், பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

14. இடைவிடாமல் 24 மணி நேரமும் பணியாற்றும் நிலையில் உள்ள முக்கிய துறைகளில் பணியாற்றுவோருக்கு, தக்க பாதுகாப்புடன், *4 மணி நேர ஷிப்ட்களில் பணியாற்ற வகைசெய்ய வேண்டுகிறோம்.*

*15. ஒவ்வொரு வங்கியும் பணியாளர் குறை தீர் மய்யம் ஒன்றை அமைத்து பணியாளர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டுகிறோம்.*

*மேற்கண்ட உடனடி நடவடிக்கைகள்,
 வங்கியாளர்கள்,  பணமதிப்பிழப்பீடு, ஜன்தன் யோஜனா, முத்ரா திட்டம், மற்ற வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஆகியவற்றில் கடுமையாக பணியாற்றியது போல, முழு வேகத்தில் பணியில் ஈடுபட வழி வகுக்கும் என்பது திண்ணம்.*


*G V  மணிமாறன்*
*பொதுச்செயலாளர்*
*AINBOF* என தெரிவித்துள்ளார்

0 comments: