Saturday, April 25, 2020

On Saturday, April 25, 2020 by Tamilnewstv in    
கருப்புகொடியேற்றும்_போராட்டம்!
அனைத்து விவசாய கடனை ரத்து செய்தும்,  கொரோனா நிவாரண தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் இன்று (25-04-2020) கருப்புகொடி  ஏற்றும் போராட்டம்...

 திருச்சி, திருவெறும்பூரில் 
விவசாய சங்க மாநில து.தலைவர் முகமதலி மற்றும் விவசாய சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் K.C. பாண்டியன் ஆகியோரது வீட்டில் கருப்பு கொடியேற்றி அரசிற்கு எதிப்பு தெரிவிக்கப்பட்டது.

 விவசாயிகளுக்கு ஆதரவாக வீட்டிலிருந்து கருப்புகொடி போராட்டம்...

விவசாயிகளுக்கும் கொரானா பாதிப்பு நிவாரணமாக ரூ.10,000/- நிதி வழங்கிடு

கறுப்புக் கொடியேந்தி போராட்டம்

சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் அனைவருக்கும் கொரானா பாதிப்பு நிவாரணமாக ரூ10,000 வழங்கிடுக

கொரானா நிவாரணப் பணிகளில் மத்திய மாநில அரசுகளின் அலட்சிய போக்கைக் கைவிடுக

அனைத்து விவசாயிகளின் கடன் தவனை வசூலையும்  ஒரு வருடத்திற்கு தள்ளிவைத்திடுக  

ஏழைக்குடும்பங்கள் அனைவருக்கும் ரூ.5,000/- வழங்கிட வேண்டும்
 என கோரிக்கைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க AIKS சார்பில் கறுப்புக் கொடி ஏந்தி வீட்டிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

0 comments: