Wednesday, April 15, 2020

On Wednesday, April 15, 2020 by Tamilnewstv in    
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக . உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமான போக்குவரத்தும்தடைசெய்யப்பட்டுள்ளது.  


திருச்சியைச் சேர்ந்த உயிர் காக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் அவசர தேவைக்காக ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் திருச்சியில் உள்ள 65 வார்டுகளுக்கு தலா 2 ஆட்டோக்கள் வீதம் 130 ஆட்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 2 ஆட்டோக்கள் இரவு பகலாக பணியில் இருக்கும். அவசர தேவைக்கு தேவைப்படுவோர் குறிப்பாக மருத்துவமனைக்கு மட்டுமே குறைந்த செலவில் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.  

மருத்துவ ஆவணங்கள் மற்றும் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே ஆட்டோவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த அவசரகால ஆட்டோ 8448107108  என்ற  ப்ரீ தொலைபேசி எண்ணை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு ஆட்டோ புக்கிங் செய்யலாம். மேலும் ukkeservice.comஎன்ற இணையதளம் மூலமும் ukk ஆப் மூலமும் ஆட்டோ புக்கிங் செய்யலாம். இந்த ஆட்டோவை ஓட்டும் ஓட்டுனர்கள் மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்டவற்றை அணிந்திருப்பார்கள்.
 உயிர் காக்கும் கரங்கள் நிறுவனர் அப்துல் கபூர் இந்த அவசரகால ஆட்டோ திட்டத்தை தொடங்கியுள்ளார். அகில இந்திய தேசிய வளர்ச்சி உயிர்காக்கும் கோவித்- 19 என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதற்கென்று பிரத்யேக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களை காவல்துறையினர் அனுமதிக்க எங்களது அறக்கட்டளை சட்டப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அப்துல் கபூர் கூறினார். 

பேட்டி: அப்துல் கபூர்.
 உயிர்காக்கும் கரங்கள் நிறுவனர்.

0 comments: