Friday, April 17, 2020

On Friday, April 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகிய ஜி வி மணிமாறன்


அவர்கள் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார் வங்கி நேரத்தை காலை பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை குறைக்கப்பட வேண்டும் 

மத்திய நிதி அமைச்சகம் நிவாரணத் தொகையை அந்தந்த பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அப்படி வரவு வைக்கப்பட்ட தொகையை அவரவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று எங்களுடைய பணியாளர்கள் 90 சதவீதம் மேல் எங்களுடைய வங்கிப் பணியாளர்கள் விநியோகம் செய்து விட்டார்கள் அதை ஏற்றுக்கொண்டு ஸ்டேட் லெவல் பேங்கர்ஸ் கமிட்டி 15. 4 .2020 சுற்றறிக்கை அனுப்பி இருந்தது நிவாரண தொகையை அனைத்து பயனாளிகளுக்கும் கிடைத்து விட்ட காரணத்தால் காலை நேரம் 10 மதியம் 2 மணி வரை செயல்படும் என்று அறிவித்திருந்தது


மேலும்  அந்தந்த வங்கியின் மேலாளர்கள் தங்களுக்கு வருகைத் தந்துள்ள பணியாளர்களை வைத்து விரைவில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் தற்போது 40 சதவீதத்திற்கு பெண்கள் வேலை செய்துவருகின்றனர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வாகனத்தில் வந்து செல்கின்றனர் பெண்கள் அவர்கள் வீட்டிற்கு விரைவாக பத்திரமாக சென்று விடவேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம் 

இந்த ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்த காலத்திலிருந்து கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக தினமும் 50 நபர்களுக்கு மேல்  உணவு வழங்கி வருகிறோம் தற்போது இன்று மனநலம் குன்றிய நபர்களுக்கு கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கனரா வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர்  ராஜகோபால் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட செயலாளர் தியாகராஜன், தலைவர் ராஜசேகர் மற்றும் அறிவழகன் ஆகியோர் உதவிகளை வழங்கினர்.

0 comments: