Saturday, April 04, 2020
On Saturday, April 04, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 04
பெங்களூர் இருந்து திருச்சி வந்து சுற்றி திரிந்த நபர் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்ற வருகிறது. கொரனா வைரஸை பரவாமல் காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வெளி மாநிலத்துக்கு சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்களை முன் வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் மத்திய . மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது. ஆனால் இதனை கண்டுகொள்ளாத திருச்சி ஈ.பி.ரோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் அருள்ராஜ் (65) டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3நாட்களுக்கு முன்பாக பெங்களூருவில் இருந்து திருச்சி வந்தார். அவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி சுகாதார கண்காணிப்பாளர் அலங்கராஜ் அவரிடம் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்றும், தனிமை படுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார். ஆனால் அவருடைய அறிவுறுத்தலைக் கேட்காமல் மீறி பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாக தகவல் வந்ததையடுத்து உடனடியாக அலங்கராஜ் சுகாதார ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் தலைமையில் போலீசார் உதவியுடன் அந்த நபரை தேடினர். அப்போது அருள்ராஜ் எடத்தெரு - மார்கெட் சாலையில் இருந்த அவரை பிடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் செயல்படும் சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றனர். பின்னர் அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளர்கள் உடனடியாக கிருமி நசினி மருந்தை தெளித்தனர்.
பெங்களூர் இருந்து திருச்சி வந்து சுற்றி திரிந்த நபர் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment