Wednesday, April 08, 2020

On Wednesday, April 08, 2020 by Tamilnewstv in    
ஆபத்தை அறியாத சமயபுரம் பொதுமக்கள்...!


தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு தமிழக அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூட்டம் கூடுவதும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வதும் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது
இவ்வேளையில் சமயபுரம் பகுதியில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக நின்றது அப்பகுதியைச் என்ற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசம் அணியாமலும் அப்பகுதியில் கூடிய கூட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அங்கு வந்து மக்களை சமூக இடைவெளிவிட்டு நிற்க அறிவுறுத்தியும் பொதுமக்கள் கேட்காமல் அலட்சியமாக நின்றனர், பிறகு காவல்துறையினர் வெகுநேரமாக நின்று பார்த்துவிட்டு ஒரு இருசக்கர வாகனத்தில் 3 காவல்துறையினர் ஏறிச் சென்றனர்.

அதை பார்த்த பொதுமக்கள்  நம்மை இடைவெளி விட்டு நிற்க சொல்லிவிட்டு இவர்கள் எப்படி போறார்கள் பாரு என அங்கு மூனு முனுத்தனர். கொரோனா விழிப்புணர்வில் மக்களிடையே அன்பாக பேசி அரவணைத்து முன் உதாரணமாக பல்வேறு காவலர்கள் மக்களின் மனதில் நின்றாலும் இது போன்ற விழிப்புணர்வு இல்லாத காவலர்களை பார்க்கும்பொழுது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

0 comments: