Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர. 

இந்த வகையில் வெறிச்சோடிய சாலைகளில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து வருகின்றனர். திருச்சியில் மஞ்சத்திடல் பாலம், பழைய பால் பண்ணை, மண்ணச்சநல்லூர், கோஹினூர் தியேட்டர் ஜங்ஷன், ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
 இந்த ஓவியத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பார்வையிட்டு ஓவியர்களை பாராட்டி வருகின்றனர்.

 பேட்டி: நாகேந்திரன். ஓவியர்

0 comments: