Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 12

கொரோனாவால் சிகிச்சைக்கு அரசு மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாிகள் தயாா் - 11,135நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சியில் கொரோனாவால்
இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா. மேலும் மாவட்டம் முழுவதும் 3045 பேர் வீடுகளில்  தனிமைபடுத்தப்பட்டு கண்கணிக்கப்பில் உள்ளனர். இந்நிலையில் மேலும்  பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு
மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாிகள் தயாா் நிலைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதில்  திருச்சி மாவட்டத்தில் 161 அரசு பள்ளி மற்றும் கல்லுாாிகளும்,
59தனியாா் பள்ளி மற்றும் கல்லுாாிகள்  கண்டறியப்பட்டுள்ளன. இந்த 220 அரசு மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாி கட்டிடங்களில் 4108 அறைகள் உள்ளன. இவற்றில் 2282 அறைகள் (விடுதிகளில் உள்ள) மெத்தை வசதிகளுடன் உள்ளன. 1826 அறைகளில் மெத்தை வசதிகள் இல்லை. இங்கு மெத்தை வசதிகள் ஏற்படுத்திட மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 11,135 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீா், கழிப்பீட வசதி உள்ளிட்ட அனைத்தும் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள ஜமால் முகமது என்ற தனியார் கல்லூரியில் ஏற்கனவே 69 பேர் தனிமை படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிட்த்தக்கது.

0 comments: