Saturday, April 18, 2020

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் முக்கிய சாலைகள், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த வகையில் 

திருச்சி ஜெயில் பேட்டை பாலக்கரை சிவாஜி சிலை சுற்றியுள்ள ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு கை தெளிப்பான் மற்றும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் சாலைகளின் இருபுறங்களிலும் கிருமிநாசினி தெளித்தனர். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக கிருமி நாசினி  தெளித்தார். 

பின்னர் நம்பர் ஒன் டோல்கேட் அருகே தங்கியுள்ள திருநங்கைகளை சந்தித்து அவர்களுக்கு இலவசமாக உணவு சமைக்கும் பொருட்கள் மற்றும் ரொட்டி போன்றவைகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருநங்கைகளுக்கு வழங்கினார் 


மேலும் அவர்களின்  குறைகளை கேட்டு அறிந்தார் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களை திருநங்கைகள் வாழ்த்தி அனுப்பினார்

0 comments: