Saturday, April 18, 2020
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*சமயபுரம் கோவிலில் தமிழக அரசு ஆணையை மீறி உள்ளே நுழைந்து தரிசனம்*
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து அனைத்து திருக்கோவில்களிலும் ஆலய தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலும் கடந்த 20.3.2020 முதல் பக்தர்களின் தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்களால் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவும் கொரோனா தாக்கத்தினால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 4.4.2020 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5.30 மணிக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் சிறப்பு பூஜைகளும் மின்சாதனம் தொடர்புடைய பெண் தொழிலதிபரும் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர் பழனிவேல் என்பவரின் மனைவியும் அரசின் உத்தரவை மதிக்காமல் தடையை மீறி திருக்கோவில் உள்ளே நடைபெற்ற பூஜைகளில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது,
சமயபுரம் சுறியுள்ள கிராமத்தினரும், உள்ளூர் ஆன்மீகவாதிகளும் மிகுந்த வேதனையும் பெரும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பூஜையில் கலந்து கொண்ட அன்று திருக்கோவிலில் உள்ள தனியார் முதன்மை காவலர்களும் கோவில் அர்ச்சகர்களும் எவ்வளவு தடுத்தும் கூட கோவில் உதவி கண்காணிப்பாளர் பழனிவேல் அவர்கள் அனைவரையும் மிரட்டி தகாத வார்த்தைகள் கூறி திருக்கோயிலின் பின்வாசல் வழியாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருக்கோவிலில் உள்ள பின்வாசல் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆலய கருவறை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வீடியோ பதிவுகளை ஆராய்ந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
திருக்கோவிலில் நடந்த இத்தகைய சம்பவங்கள் பற்றி கோவில் இணை ஆணையர் அசோக்குமார் அவர்களுக்கும் தெரியும் எனவும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அரசின் உத்தரவை மதிக்காமல் தனிநபரின் விருப்பத்தின் பேரில் ஆலய விதிகளை மீறி செயல்பட்ட சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர் பழனிவேல் அவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...




0 comments:
Post a Comment