Thursday, May 28, 2020
திருச்சி மே 28
கொரோனா பாதிப்பு கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி எல்ஐசி முகவர் சங்கத்தினர் அலுவலக வாயில் ஆர்ப்பாட்டம்.
இந்தியா முழுவதும்
கொரோனா
பாதிப்பினால் பல தொழில்கள் நலிவடைந்து பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முதன்மை பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் பணிபுரிபவர்களுக்கு முகவர்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை மேலும் கேரளா மாநிலத்தில் கேரள அரசு எல்ஐசி முகவராக பணிபுரியும் ஒருவருக்கும் தலா ரூபாய் 5000 வழங்கி உள்ளதாக கூப்படுகிறது. பல ஆயிரம் கோடி வருமானத்றை ஈட்டி தரும் முகவர்களுக்கு
தமிழக அரசு இதுவரை எந்த விதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக எல்ஐசி முகவர்கள் அனைவருக்கும் ரூபாய் 50ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி எல் ஐ சி முகவர் சங்கத்தின் தலைவரும்
முதன்மை காப்பீட்டு ஆலோசகருமான
பூமிநாதன் தலைமையில் திருச்சி எல்ஐசி அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட உரையை தென் மண்டல குழு உறுப்பினர் பொன்.வேலுசாமி வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில்
உடனடியாக கொரோனா நிவாரண நிதியாக
ரூ 50ஆயிரம் வழங்க வழங்கவேண்டும், எல்ஐசி முகவர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மேலும்
டார்கெட் வைத்து செயல்படும் நிலையை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜோசப், செல்வராஜ் உட்பட
25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment