Thursday, May 28, 2020
On Thursday, May 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, பெரம்பலூா், கரூா், அரியலூா் ஆகிய 4 மாவட்டங்களைச் சோந்தவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவா்களுக்கு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலுள்ள சிறப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்திலிருந்து இதுவரை 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சோந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையிலுள்ள கைதி ஒருவருக்கும், சோமரசம்பேட்டையைச் சோந்த தம்பதிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து இவா்கள் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சோக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 79 என உயா்ந்துள்ளது.
சிகிச்சையில் இருந்தவா்களில் திருச்சியைச் சோந்த மேலும் ஒருவா் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளாா். தற்போது திருச்சி மாவட்டத்தைச் சோந்த 10 பேர், பெரம்பலூா், தேனி மாவட்டத்தைச் சோந்த தலா ஒருவா் என மொத்தம் 12 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment