Sunday, May 31, 2020

On Sunday, May 31, 2020 by Tamilnewstv in    
  •  திருச்சி கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டாஸ்மார்க் கடையில் திருட்டு 357360 ரூபாய் திருடபட்டுள்ளதாக கூறப்படுகிறது 



 திருச்சி மாநகரம் கோட்டை காவல் சரகம் கரூர் சாலையில் உள்ள தாஜ் கல்யாண மண்டபம் எதிரில் உள்ள அரசு மதுபான கடை எண் 10304 இன்று காலை 9.45 மணி அளவில் அதன் சூப்பர்வைசர் முருகன் வயது 50 தந்தை பெயர் சண்முகம் 3வது குறுக்கு தெரு சீனிவாச நகர் வயலூர் ரோடு திருச்சி என்பவரும் விற்பனையாளர்கள் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் திறக்க வரும்பொழுது ஏற்கனவே கடையின் முன்புறம் உள்ள ஷட்டர் இன் 20 இல்லாமலும் உட்புறம் இருந்த கம்பியினால் ஆன கேட்டும் திறக்கப்பட்டு இருந்துள்ளது மேற்படி நபர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது முதல் நாள் வசூல் ஆன ரூபாய் 3 லட்சத்து 54 ஆயிரம் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.

 உடனடியாக கோட்டை காவல் நிலைய குற்றப் பிரிவுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர் கடையில் இருந்த முன்புற 3 பூட்டுகளும்  காணாமல் போயுள்ளது காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

  மேலும் சில நாட்களுக்கு முன்பு உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மார்க் கடையில் திருட்டு போனது என்பது குறிப்பிடத்தக்கது

0 comments: