Friday, March 05, 2021
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல்
குளத்தில் தினசரி நீச்சல் பயிற்சி பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறை விதிமுறைகளுடன் 10 வயதுமுதல்65 வயதிற்குட்பட்டவர்களுக்கு
அனுமதி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைணயம் விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தினசரி பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன் வழிகாட்டு
நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி அண்ணா
விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு 06.03.2021 முதல் அனுமதிக்கப்படுகிறது.
10 வயது முதல் 65 வயதிற்குடபட்ட பொதுமக்கள் தினசரி நீச்சல் பயிற்சி
மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும் பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கொன தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் விளையாட்டு
உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பயிற்சிக்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல் முககவசம் அணிதல் நீச்சல் குளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.
வழிகாட்டுநெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் சளி காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய காரணங்களினால் விளையாட்டு மைதானத்திற்குள் அரங்கிற்குள் நுழைய முற்றிலுமாக தடை
செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம்
இயங்குவதற்கு அனுமதி இல்லை.
விதிமுறைகளுடன் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த அனுமதிக்கபடுவர்.
மேலும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இவ்வாறு தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...

0 comments:
Post a Comment