Monday, February 07, 2022
திருச்சி கம்பரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கம்பரசம் பேட்டையில் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நாலு கால யாக சால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9.45 மணிக்கு கோவில் கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 10.15 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வானது முத்துக் குமார சிவாச்சாரியார், சதீஷ் சிவாச்சாரியார், பிரபு சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கம்பரசம்பேட்டை பொதுமக்கள், ராதே கிருஷ்ணா வெல்ஃபேர் டிரஸ்ட், மணி ஐயர் ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கோவில் அறங்காவலர்கள் மணி அய்யர், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், திருப்பணி குழுவினர் கண்ணன், ரவிசங்கர், கோவிந்தராஜன் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment