Friday, July 08, 2022
On Friday, July 08, 2022 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan
வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கணவன் மனைவியை கொலை வெறி தாக்குதல்
திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அம்பலக்காரர் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜான் பீட்டர் இவரது மனைவி சகாய மேரி. இவர்களுடன் சகாய மேரியின் தந்தையும் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முத்துமாணிக்கம் வயது 35 இவருக்கும் ஜான் பீட்டருக்கும் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜான் பீட்டர் தனது வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மார்க்கெட் சென்றபோது அவரை வழிமறித்த முத்து மாணிக்கம் வழக்கை வாபஸ் வாங்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் அருகில் கிடந்த கல்லைக் கொண்டு ஜான் பீட்டர் முகத்தில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜான் பீட்டர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து தன்னை தாக்கிய முத்துமாணிக்கம் மீது புகார் அளித்தார். இந்நிலையில் ஜான் பீட்டர் காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்ததை அறிந்து கொண்ட முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோர் ஜான் பீட்டரை தேடி அவரது வீட்டிற்கு வந்தனர். ஜான் பீட்டர் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் அவரது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அவரது மனைவி சகாய மேரியை தாக்கி இரும்பு கடப்பாரையால் கை மற்றும் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அறிந்து வந்த ஜான் பீட்டர் உடனடியாக தனது மனைவியை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கடப்பாரையால் வயிற்றில் குத்தியதில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.கொலை வெறியுடன் கணவன் மனைவியை தாக்கிய முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோரை கைது செய்யக்கோரி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஜான் பீட்டர் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதில் முத்தையன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முத்து மாணிக்கம் தற்போது தலைமுறைவாகியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் தமிழகமெங்கும் கடையடைப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது அதில் ஒர...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment