Showing posts with label தர்மபுரி. Show all posts
Showing posts with label தர்மபுரி. Show all posts
Thursday, September 18, 2014
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மாணவி கற்பழித்து கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பூசாரி. இவரது மகன் மாதப்பன். விவசாயி. மாதப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு செவ்வந்தி (வயது 15) என்ற மகள் இருந்தார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தினமும் கோவிந்தசாமி பள்ளிக்கு கூட்டி செல்வது வழக்கம். கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி கோவிந்தசாமி விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சித்ரா மாணவியை மாதப்பனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போது மாதப்பன் தொட்லாம்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றிற்கு மாணவியை கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அதே கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.
விவசாயிக்கு ஆயுள் தண்டனை
அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாணவி உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதப்பனை போலீசார் கைது வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம்சாட்டப்பட்ட விவசாயி மாதப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை நிவாரண உதவியாக அந்த மாணவியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மாணவி கற்பழித்து கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பூசாரி. இவரது மகன் மாதப்பன். விவசாயி. மாதப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு செவ்வந்தி (வயது 15) என்ற மகள் இருந்தார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தினமும் கோவிந்தசாமி பள்ளிக்கு கூட்டி செல்வது வழக்கம். கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி கோவிந்தசாமி விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சித்ரா மாணவியை மாதப்பனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போது மாதப்பன் தொட்லாம்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றிற்கு மாணவியை கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அதே கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.
விவசாயிக்கு ஆயுள் தண்டனை
அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாணவி உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதப்பனை போலீசார் கைது வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம்சாட்டப்பட்ட விவசாயி மாதப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை நிவாரண உதவியாக அந்த மாணவியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...