Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாணவி கற்பழித்து கொலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பூசாரி. இவரது மகன் மாதப்பன். விவசாயி. மாதப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு செவ்வந்தி (வயது 15) என்ற மகள் இருந்தார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தினமும் கோவிந்தசாமி  பள்ளிக்கு கூட்டி செல்வது வழக்கம். கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி கோவிந்தசாமி விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சித்ரா மாணவியை மாதப்பனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போது மாதப்பன் தொட்லாம்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றிற்கு மாணவியை கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அதே கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.

விவசாயிக்கு ஆயுள் தண்டனை 

அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாணவி உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக  மாதப்பனை போலீசார் கைது  வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம்சாட்டப்பட்ட  விவசாயி மாதப்பனுக்கு  ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை நிவாரண உதவியாக அந்த மாணவியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments: