Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஓசூர் நகராட்சி 16–வது வார்டில் என்.டி.ஆர். நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து என்.டி.ஆர்.நகர் பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஓசூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நகராட்சி கமிஷனர் டாக்டர் இளங்கோவனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் டாக்டர் இளங்கோவன், சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

0 comments: