Showing posts with label கிருஷ்ணகிரி. Show all posts
Showing posts with label கிருஷ்ணகிரி. Show all posts

Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் !

ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜா சக்தி என்ற அமைப்பினர் ஈம சடங்கு செய்து ஆர்பாட்டம்.

Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

ஒசூர்: காவிரி பிரச்னையால் கர்நாடகம் செல்லும் தமிழகப் பேருந்துகள் மூன்றாவது நாளாக இன்றும் புதன்கிழமையும் நிறுத்தப்பட்டுள்ளன. பெங்களூருக்குச் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் ஒசூரில் இறக்கி விடப்பட்டதால், பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.
  தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களான மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்பேட்டைஉள்பட பல இடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர், காவிரி பாதுகாப்புக் குழுவினர் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால் மேட்டூர், பாலாறு வழியாக கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால், மைசூரு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மூன்றாவது நாளாக இன்றும் புதன்கிழமையும் இயக்கப்படவில்லை. அதனால், பேருந்துகள் ஒசூர் மற்றும் மேட்டூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
  மூன்றாவது நாளாக பேக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்து மாதேஸ்வரன் சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லும் 500-க்கும் அதிகமான அரசுப் பேருந்துகள் ஒசூரிலேயே திருப்பி விடப்பட்டுள்ளன. பெங்களூரில் இருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் ஒசூர் அட்கோ மற்றும் சிப்காட்டில் போலீஸார் நிறுத்தி, எச்சரித்து வருகின்றனர். இதனால் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள்மட்டும் செல்கின்றன. தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் எல்லையிலேயே திரும்பி வருகின்றன.

இந்த நிலையில், 3 நாள்கள் தொடர் விடுமுறையில் தமிழகத்துக்கு வந்த கர்நாடக மாநிலத்தில் பணியில் இருக்கும் தமிழர்கள் பெங்களூரு செல்ல முடியாமல் ஒசூரில் தவித்தனர். சிலர் அத்திப்பள்ளிவரை நடந்து சென்று, அங்கிருந்து கர்நாடக மாநிலப் பேருந்துகளில் சென்றனர்.
கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் அத்திப்பள்ளி வரை இயக்கப்பட்டன.

ஒசூர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், பேருந்து நிலையம், மூக்கணடப்பள்ளி, சூசூவாடி, அத்திப்பள்ளி போன்ற இடங்களில் தமிழக போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று அத்திப்பள்ளியில் கர்நாடக மாநில போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    


கிருஷ்ணகிரி : கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஒசூருடன் நிறுத்தப்பட்டன.

தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள், மாநில எல்லையான ஒசூருடன் நிறுத்தப்பட்டன. காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் கர்நாடக பஸ் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் காட்டு யானைகள் மிதித்து அப்பாவி கிராம மக்கள் பலியாவது தொடர்கதையாகி வரு கிறது. வனத்துறை ஒத் துழைப்பு இல்லாத நிலை யில் கிராம மக்களே யானைகளை விரட்ட முயற்சிக்கும் போது இது போன்ற அசம்பா விதங் கள் நிகழ்வதாக குற்றம் சாட்டப்படுகிறது

காட்டு யானை கூட்டம்

வனப்பகுதிகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்னி, மலைப்பாம்பு போன்ற காட்டு விலங்குகள் அதிகம் வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வரு வதால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கை யான நிகழ்வாகி விட்டது.

குறிப்பாக, காட்டு யானை கள் கிராமப் பகுதிகளுக்குள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலு வலகம் வரை வந்து பொது மக்களை மிரட்டி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தது. இதனால் யானைகள் மிதித்து பலியாவோரின் எண்ணிக் கையும் ஆண்டுதோறும் அதி கரிக்க தொடங்கி உள்ளது.

விவசாய பயிர்கள் நாசம்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் நுழைந்தது. இவை கள் 2 பிரிவுகளாக பிரிந்து கர் நாடகா மாநில எல்லை யோரம் உள்ள வனப்பகுதி களில் ஒரு குழுவும், ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள மகாராஜகடை, குருவிநாயனப் பள்ளி, காளிக்கோவில் போன்ற கிராமப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியிலும் சுற்றி வருகிறது.

குறிப்பாக மகாராஜகடை பகுதியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி வந்து விவசாய நிலங்களில் பொது மக்கள் பயிரிட்ட விவசாய பயிர்களையும், மாந்தோட்டங் களையும் அழித்து வந்தன. இரவு நேரங்களில் வரும் காட்டு யானை கூட்டத்தின் அட்டகாசத்தை பார்த்த இந்த பகுதி விவசாயிகள் மனம் நொந்து போய் உள்ளனர்.

யானை சாவு

இதுகுறித்து கிராம மக்கள் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், காட்டு யானைகளை விரட்ட வனத் துறை முழுமுயற்சி எடுக்க வில்லை. இந்த நிலையில் மகாராஜகடை பகுதியில் மாசு கலந்த தண்ணீரை குடித்த யானை ஒன்று பலியானது. அதற்கு பிறகும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த யானைகள் மகாராஜாகடை கிராமத்தை ஒட்டிய பகுதியில் இரவு நேரங் களில் வரத் தொடங் கியது.

எந்த நேரமும் ஊருக்குள் நுழையும் என்ற நிலையில் கிராம மக்களே யானைகளை காட்டுக்குள் விரட்டலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து தீப்பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொண் டனர்.

விவசாயி பலி- சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மகாராஜகடை முனியப்பன் கோவில் பகுதிக் குள் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வரவே, கிராம மக்கள் அவற்றை விரட்ட தீப்பந்தங்களுடன் கிளம்பினார்கள். அவர்களை யானைகள் திருப்பி விரட்ட தொடங்கியது. இதில் அனை வரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன்(55) என்ற விவசாயி யானையிடம் சிக்கிக் கொண்டார்.

யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் திரண்டனர். அவர்கள் பலியான சின்னப் பையனின் உடலை மகாராஜ கடையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப் போது வனத்துறை அலுவல கத்தை சிலர் உடைத்து சூறை யாடினார்கள்.

பொதுமக்கள் விரக்தி

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் நடராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பிணத்துடன் மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அப்போது ஆவேசத்துடன் பேசிய அந்த பகுதி பொது மக்கள், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சுற்றித் திரியும் காட்டு யானைகளை விரட்ட வேண் டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் அவர்கள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் எங்கள் கிராமத் தையும், பொதுமக்களையும் யானைகளிடம் இருந்து பாதுகாக்க இரவு நேரங்களில் தீப்பந்தம் மற்றும் பட்டாசு களுடன் கிளம்பினோம். இதில் சின்னப்பையன் பரி தாபமாக இறந்து விட்டார். வனத்துறையின் அலட்சியமே இவரின் உயிரிழப்புக்கு காரண மாகும் என தெரிவித்தனர். நள்ளிரவு 2 மணி வரை நீடித்த பொதுமக்களின் போராட்டம், அதிகாலையில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மகராஜாகடை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஓசூர் நகராட்சி 16–வது வார்டில் என்.டி.ஆர். நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து என்.டி.ஆர்.நகர் பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஓசூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நகராட்சி கமிஷனர் டாக்டர் இளங்கோவனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் டாக்டர் இளங்கோவன், சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான ரோலர்ஸ் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி ரிம் பள்ளியில் நடந்தது. இதில் 250–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டார் கள். தமிழ்நாடு ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடுவராக சென்னையை சேர்ந்த கார்த்திக், 2–ம் நிலை நடுவராக கிருஷ்ணகிரி ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலாளர் ராஜ்குமார், மூன்றாம் நிலை நடுவராக பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் ரோலர்ஸ் கேட்டிங் சிறப்பு பயிற்சியாளர் ரகமத் ஆகியோர் செயல்பட்டார்கள்.  ரோலர் அட்சஸ்டபிள் ஸ்கேட்டிங், ஸ்கோட் ஸ்கேட்டிங், இன்லைன் ஸ்கேட்டிங் ஆகிய பிரிவுகளில் வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் மாணவ–மாணவிகள் 52 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார்கள்.

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
புதிய தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் விதமாக 25 சதவீதம் மானியத்தில் தொழிற் கடனுதவிகள் வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளர் ஏகாம் பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொழில்முனைவோர்

படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர் களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சித் திட்டம் (நீட்ஸ்) என்ற புதிய திட்டத்தை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப் ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு 1 மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கி கள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.

25 சதவீதம் மானியம்

இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானி யமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படு கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு ( டிப்ளமோ) இளங் கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரி வினர்களான மகளிர், பட்டிய லினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகி யோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏது மில்லை.

ரூ.1 கோடி வரை...

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் அதிகபட்ச மாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங் கலாம். பொதுப் பயனாளி தனது பங்காக திட்ட மதிப் பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட் டில் 5 சதவீதம் செலுத்த வேண் டும்.

தகுதியுள்ள படித்த இளை ஞர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமை யிலான தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப் படுவார்கள். மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய, தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சூளகிரி அருகே உள்ள கொதமகுந்தியை சேர்ந்தவர் ஜாகீர். இவரது மனைவி அக்தர் (வயது 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அக்தர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
தேன்கனிக்கோட்டை அருகே போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப் பட்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது இருது கோட்டை. இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 36). இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஆவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் அதே ஊரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென் றார்.

அப்போது கடைக்காரரு டன் தகராறு செய்தார். இது தொடர்பாக தேன்கனிக் கோட்டை போலீஸ் நிலையத் தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேன்கனிக் கோட்டை போலீஸ் ஏட்டு வடிவேல் மற்றும் 2 போலீசார் இருதுகோட்டைக்கு சென் றனர்.

6 பேர் மீது வழக்கு

அப்போது அங்கிருந்த செல்வம், மற்றும் மரியப்பா, முனிராஜ், நாகராஜ். சாப் ரானப்பள்ளியை சேர்ந்த சுரேஷ், ஜெயராமன் ஆகிய 6 பேரும் சேர்ந்து போலீசாரை தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

அது குறித்து ஏட்டு வடிவேல் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ் கர் வழக்குப்பதிவு செய்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக செல்வம் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். அவர்களில் முனிராஜ், சுரேஷ், ஜெயராமன் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். செல்வம், மரியப்பா, நாகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி அருகே 2 இடங்களில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் பிச்சைராமன் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், மாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ரோந்துப்பணி

இந்த குழுவினர் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டை வட்டம் உடையாண்டஅள்ளி அருகே சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் கேட்பாரற்று 15 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் இந்த ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்திற்கு கடத்த வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல் ஒப்பதவாடி கூட் ரோடு அருகில் சாலையோரம் 14 மூட்டைகளில் ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதுவிசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 இடங்களில் இருந்தும் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றி, கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதன் மொத்த எடை 1½ டன் ஆகும். மேலும் இந்த ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.