Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    


கிருஷ்ணகிரி : கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஒசூருடன் நிறுத்தப்பட்டன.

தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள், மாநில எல்லையான ஒசூருடன் நிறுத்தப்பட்டன. காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் கர்நாடக பஸ் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: