Wednesday, September 17, 2014
புதிய தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் விதமாக 25 சதவீதம் மானியத்தில் தொழிற் கடனுதவிகள் வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளர் ஏகாம் பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்முனைவோர்
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர் களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சித் திட்டம் (நீட்ஸ்) என்ற புதிய திட்டத்தை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப் ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு 1 மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கி கள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
25 சதவீதம் மானியம்
இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானி யமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படு கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு ( டிப்ளமோ) இளங் கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரி வினர்களான மகளிர், பட்டிய லினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகி யோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏது மில்லை.
ரூ.1 கோடி வரை...
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் அதிகபட்ச மாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங் கலாம். பொதுப் பயனாளி தனது பங்காக திட்ட மதிப் பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட் டில் 5 சதவீதம் செலுத்த வேண் டும்.
தகுதியுள்ள படித்த இளை ஞர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமை யிலான தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப் படுவார்கள். மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய, தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்முனைவோர்
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர் களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சித் திட்டம் (நீட்ஸ்) என்ற புதிய திட்டத்தை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப் ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு 1 மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கி கள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
25 சதவீதம் மானியம்
இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானி யமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படு கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு ( டிப்ளமோ) இளங் கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரி வினர்களான மகளிர், பட்டிய லினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகி யோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏது மில்லை.
ரூ.1 கோடி வரை...
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் அதிகபட்ச மாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங் கலாம். பொதுப் பயனாளி தனது பங்காக திட்ட மதிப் பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட் டில் 5 சதவீதம் செலுத்த வேண் டும்.
தகுதியுள்ள படித்த இளை ஞர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமை யிலான தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப் படுவார்கள். மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய, தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment