Wednesday, September 17, 2014
புதிய தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் விதமாக 25 சதவீதம் மானியத்தில் தொழிற் கடனுதவிகள் வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளர் ஏகாம் பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்முனைவோர்
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர் களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சித் திட்டம் (நீட்ஸ்) என்ற புதிய திட்டத்தை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப் ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு 1 மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கி கள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
25 சதவீதம் மானியம்
இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானி யமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படு கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு ( டிப்ளமோ) இளங் கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரி வினர்களான மகளிர், பட்டிய லினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகி யோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏது மில்லை.
ரூ.1 கோடி வரை...
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் அதிகபட்ச மாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங் கலாம். பொதுப் பயனாளி தனது பங்காக திட்ட மதிப் பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட் டில் 5 சதவீதம் செலுத்த வேண் டும்.
தகுதியுள்ள படித்த இளை ஞர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமை யிலான தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப் படுவார்கள். மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய, தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்முனைவோர்
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர் களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சித் திட்டம் (நீட்ஸ்) என்ற புதிய திட்டத்தை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப் ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு 1 மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கி கள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
25 சதவீதம் மானியம்
இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானி யமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படு கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு ( டிப்ளமோ) இளங் கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரி வினர்களான மகளிர், பட்டிய லினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகி யோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏது மில்லை.
ரூ.1 கோடி வரை...
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் அதிகபட்ச மாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங் கலாம். பொதுப் பயனாளி தனது பங்காக திட்ட மதிப் பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட் டில் 5 சதவீதம் செலுத்த வேண் டும்.
தகுதியுள்ள படித்த இளை ஞர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமை யிலான தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப் படுவார்கள். மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய, தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment