Showing posts with label புதுடெல்லி. Show all posts
Showing posts with label புதுடெல்லி. Show all posts

Wednesday, September 28, 2016

On Wednesday, September 28, 2016 by Unknown in    

புதுடில்லி : உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இணையதளமான கூகுள் நேற்று தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடியது. இதனையொட்டி 'கூகுள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைபை வசதியை அந்நிறுவனம் செய்துள்ளது.

இந்திய மக்கள் நேற்று முதல் பொது இடங்களில் இந்த இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வணிக வளாகங்கள், பல்கலைக்கழகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றில் இந்த வசதியைப் பெற முடியும். கூகுள் நிறுவனம் மத்திய ரயில்வேயின் 'ரயில்டெல்' நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே நாடுமுழுவதும் 53 ரயில் நிலையங்களில், இலவச 'வைபை' வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 08, 2015

On Thursday, January 08, 2015 by farook press in ,    
புதுடெல்லியின் துவாராகா பகுதியை சேர்ந்தவர் அமித் பச்சன் (வயது 32) அவரது மனைவி ஷிவானி பத்னி இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆகிறது. நேற்று இரவு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி  பேசினர். இதில் கோபம்  அடைந்த அமித் பச்சன் கத்தியை எடுத்து மனைவியை குத்தினார். பின்னர் டிராயிங் அறைக்குள் சென்ற பூட்டி கொண்டார்.

உடனடியாக மனைவி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.  போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஷிவானி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீசார் அவரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  பூட்டபட்டு இருந்த டிராயிங்க் ரூமை திறந்து பார்த்த போது அதில் அமித் பச்சன் கேபிள் வயரை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் ஷிவானியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் திருமண குழப்பம் காரணமாக தகராறு நடந்ததாக கூறினார்.


பாச்சனின் சகோதரி திரிஷா இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை இதற்கு பின்னால் ஷிவானி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுவதாவது:-

தம்பதியினர் ஷோபா செட் வாங்க திலக் நகர் சென்றனர். பின்னர்  அமித் ஷிவானியை பெற்றோரின் வீட்டில்  விட்டு  நணபர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
பின்னர் இரவு மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இரவு ஷிவானி கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை இதனால் அமித் ஆத்திரமடைந்தார். மனைவியை கட்டயபடுத்தினார். இதனால் மனைவி அடுத்த அறைக்கு சென்று விட்டார்.  இதை தொடர்ந்து கோபம் அடைந்த அமித் மனைவியை கத்தியால் குத்தினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.