Tuesday, October 07, 2014

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காலந்தாழ்த்தாது உடனடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் திருப்பூரில் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் பெருமாநல்லூரில் திங்களன்று காலை 8 மணிக்கு இந்த பிரச்சார இயக்கத்தை சிஐடியு பனியன் சங்கத் தலைவர் கே.காமராஜ் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பாண்டியன் நகர், போயம்பாளையம் பிரிவு, எஸ்.ஏ.பி.பின்புறம், சிட்கோ, கருவம்பாளையம், பல்லடம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்பட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பனியன் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளில் தொழிலாளர்கள் மத்தியில் போனஸ் உரிமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், மாவட்ட நி்ர்வாகிகள் பி.முருகேசன், பி.பாலன், ஜி.சம்பத் மற்றும் பனியன் சங்க நிர்வாகிகள் எம்.என்.நடராஜ், கே.நாகராஜ் ஆகியோர் உரையாற்றினர். 
இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக செவ்வாயன்று மாலை குமரன் சிலை அருகில் அனைத்து தொழில் சார்ந்த சிஐடியு சங்கங்கள் சார்பில் போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
--------------

Monday, October 06, 2014

On Monday, October 06, 2014 by Unknown in ,    


On Monday, October 06, 2014 by Unknown in ,    

On Monday, October 06, 2014 by Unknown in ,    
On Monday, October 06, 2014 by Unknown in ,    

On Monday, October 06, 2014 by Unknown in ,    

Sunday, October 05, 2014

On Sunday, October 05, 2014 by Unknown in ,    
கரூர் :கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்தில் முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் ஜெயந்தி ஆய்வுசெய்தனர்.கலெக்டர் ஜெயந்தி, கூறியதாவது:
முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் அனைத்து டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாவட்டத்தின் இரண்டு நகராட்சி மற்றும், 11 டவுன் பஞ்சாயத்துகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகள் முழு சுகாதாரமாக இருப்பதே, இதன் நோக்கமாகும்.இத்திட்டத்தின் மூலம் திறந்தவெளி மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறைகளை பயன்படுத்துவதை, பொதுமக்களிடையே கட்டாயப்படுத்துதல் மற்றும் சுற்றுசூழல் கெடாமல் இருக்க, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினசரி நகர்ப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மூலம் தூய்மையான காற்றை சுவாசிப்பதுடன், பொதுமக்களுக்கு நோய் தாக்குதலின்றி சுகாதார முறையில் வாழ முடியும். பொதுமக்கள் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.நிகழ்ச்சியில், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ராஜேந்திரன், கரூர் தாசில்தார் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Sunday, October 05, 2014 by Unknown in ,    
கரூர்: எப்போது பார்த்தாலும் குடிப்பது, சண்டை போடுவது என்று இருந்த கணவரால் மிகுந்த, மன வேதனை அடைந்த 48 வயது பெண் தனது 50 வயது கணவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். குளித்தலை அருகே உள்ளது மாடு விழுந்தான் பாறை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நடராஜன் (50) இவருடைய மனைவி மீனா (48) இவர்களுக்கு, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மகன் ராம்குமார் லாரி டிரைவராக இருக்கிறார். திருச்சியில் உள்ளார். நடராஜன் குடிக்கு அடிமையாகி விட்டார். எப்போது பார்த்தாலும் குடிப்பது, மனைவியைப் போட்டு அடிப்பது என்று இருந்து வந்தார். அவரைத் திருத்த முயன்று மீனாவுக்கு தோல்வியே கிடைத்தது. நேற்று முன்தினம் இரவுவும் போதையில் வந்த நடராஜன், மீனாவிடம், தகராறு செய்து விட்டு தூங்கி விட்டார். கணவரின் செயலால் கொதிப்படைந்த மீனா, இனியும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை, கத்தியால், கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பிறகு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, நடராஜன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார், நடராஜனின் உடலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியதுடன், மீனாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதலில் குடி போதையில் நடராஜனே கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொண்டதாக முதலில் கூறினார் மீனா. ஆனால் போலீஸார் தீவிரமாக விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மீனாவைப் போலீஸார் கைது செய்தனர்.
On Sunday, October 05, 2014 by Anonymous in