Thursday, March 26, 2020
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 26
அதிகமாக
உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் திருச்சியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கூடிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நிர்வாகத்தால் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இந்த கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வகையில் இன்று திருச்சியில் முக்கிய சந்தையாக விளங்கும் காந்தி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 7 மணி வரை மட்டுமே காந்தி சந்தை இயங்கும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். மொத்த வியாபாரம் மட்டுமே இங்கு நடைபெறும். பொது மக்கள் யாரும் காய்கறி வாங்க வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய சந்தை இன்று காலை ஏழு மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் கூடிய பொதுமக்களை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
அதிகமாக
உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் திருச்சியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கூடிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நிர்வாகத்தால் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இந்த கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வகையில் இன்று திருச்சியில் முக்கிய சந்தையாக விளங்கும் காந்தி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 7 மணி வரை மட்டுமே காந்தி சந்தை இயங்கும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். மொத்த வியாபாரம் மட்டுமே இங்கு நடைபெறும். பொது மக்கள் யாரும் காய்கறி வாங்க வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய சந்தை இன்று காலை ஏழு மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் கூடிய பொதுமக்களை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 26
மத்தியமண்டலத்தில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல்
சாலைகளில் நடமாடிய மற்றும் கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது - செய்யப்பட்டனர். ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் என 325 வாகனங்கள் பறிமுதல்
- மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்.
கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார். இதன் முதல்நாளான நேற்று பல இடங்களிலும் காரணமின்றி சுற்றிதிரிந்த நபர்கள் திருப்பி அனுபப்பட்டனர். சில இடங்களில் ‘தட்டி’ அனுப்பப்பட்டனர். எனினும் நண்பர்களாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தினர். அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய மற்றும் கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் என 325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்தியமண்டலத்தில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல்
- மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்.
கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார். இதன் முதல்நாளான நேற்று பல இடங்களிலும் காரணமின்றி சுற்றிதிரிந்த நபர்கள் திருப்பி அனுபப்பட்டனர். சில இடங்களில் ‘தட்டி’ அனுப்பப்பட்டனர். எனினும் நண்பர்களாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தினர். அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய மற்றும் கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் என 325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Wednesday, March 25, 2020
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், திருச்சி காந்தி சந்தையில் அதிக அளவில் கூட்டம் கூடுவதாக புகார் எழுந்ததையடுத்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
நாளை 26 ஆம் தேதி முதல் காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே இயங்கும். இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மட்டுமே இந்த வியாபாரம் நடைபெறும். சில்லரை வியாபாரிகளான மளிகைக் கடைகாரர்கள் மட்டுமே வந்து காய்கறிகளை வாங்க வேண்டும். பொதுமக்கள் யாரும் காந்தி சந்தையினுள் செல்லக்கூடாது.
மளிகை கடைகளில் மட்டுமே பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை காந்தி சந்தை இயங்காது. யாரும் உள்ளே செல்ல முடியாது. வியாபாரிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் காந்தி சந்தைக்கு வரவேண்டும். மாஸ்க் அணியாத வியாபாரிகள் சந்தைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதைப்போல் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே 13 பேர் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று மட்டும் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஏழு நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவில் கரோனா தாக்குதல் இல்லை என்று முடிவு வந்துவிட்டது. மீதமுள்ள 6 நோயாளிகளுக்கு பரிசோதனை வரவேண்டியுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது இருசக்கர வாகனங்கள் மட்டும் அதிக அளவில் போக்குவரத்து இருந்தது காவல் துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இவர்களைத் தவிர இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சென்றால் இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றார்.
அப்போது அவர் கூறுகையில், திருச்சி காந்தி சந்தையில் அதிக அளவில் கூட்டம் கூடுவதாக புகார் எழுந்ததையடுத்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மளிகை கடைகளில் மட்டுமே பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை காந்தி சந்தை இயங்காது. யாரும் உள்ளே செல்ல முடியாது. வியாபாரிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் காந்தி சந்தைக்கு வரவேண்டும். மாஸ்க் அணியாத வியாபாரிகள் சந்தைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதைப்போல் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே 13 பேர் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று மட்டும் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஏழு நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவில் கரோனா தாக்குதல் இல்லை என்று முடிவு வந்துவிட்டது. மீதமுள்ள 6 நோயாளிகளுக்கு பரிசோதனை வரவேண்டியுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது இருசக்கர வாகனங்கள் மட்டும் அதிக அளவில் போக்குவரத்து இருந்தது காவல் துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இவர்களைத் தவிர இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சென்றால் இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றார்.
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி யில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளர் கேஎன் . நேரு அவர்கள் கொரோனா நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக தொகுதி மக்களுக்கு 2500 மாஸ்க்,சோப்பு, கை சுத்தம் செய்யும் திரவம் (சேனிடைசர்) ஆகியவற்றை
மாநகர மற்றும் பகுதி செயலாளர்களிடம் கொடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், தமிழ்நாடு மாநில, மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன், அந்தநல்லூர் துரைராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்
மாநகர மற்றும் பகுதி செயலாளர்களிடம் கொடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், தமிழ்நாடு மாநில, மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன், அந்தநல்லூர் துரைராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மக்களை பெரும் துயரிலும் சிரமத்திலும் உடல் மற்றும் மன உளைச்சலிலும் ஆட்படுத்தியிருக்கும்
வரலாறு காணாத கொடுமையான தொற்று கிருமியாம் கோரோனா கிருமி பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் (வெண்டிலேட்டர், முக கவசம், Hand Sanitizer) போன்ற நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துமனைகளில் வாங்கிடும் விதத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ₹10 லட்சம் வீதம் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவருக்கு திருச்சி கிழக்கு மேற்கு , திருவரம்பூர், திருவரங்கம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ₹40 லட்சமும் புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ₹10 லட்சம் வீதம் மொத்தம் ₹20 லட்சமும் ஆக மொத்தம் ₹60 லட்சம் திருச்சி , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதல்கட்டமாக வழங்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்
வரலாறு காணாத கொடுமையான தொற்று கிருமியாம் கோரோனா கிருமி பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் (வெண்டிலேட்டர், முக கவசம், Hand Sanitizer) போன்ற நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துமனைகளில் வாங்கிடும் விதத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ₹10 லட்சம் வீதம் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவருக்கு திருச்சி கிழக்கு மேற்கு , திருவரம்பூர், திருவரங்கம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ₹40 லட்சமும் புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ₹10 லட்சம் வீதம் மொத்தம் ₹20 லட்சமும் ஆக மொத்தம் ₹60 லட்சம் திருச்சி , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதல்கட்டமாக வழங்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது அண்ணா சிலை வழியாக பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்கள் மற்றும் பல ஊர்களில் இருசக்கர வாகனங்கள் வழியாக வரும் நபர்கள் எல்லாம் அந்த வழியாக வந்து செல்ல வேண்டும்
திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாநகர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு , ஆனந்த் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் தனது போக்குவரத்து பணியின் இடையே பொதுமக்களுக்ககு கொரானா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த (sanitizer) சனிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் மக்களைகொரானா வைரஸ்இருந்து காப்பாற்றும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் சிறப்பு பணியில் போக்குவரத்துக் காவல்துறையினர்
திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாநகர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு , ஆனந்த் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் தனது போக்குவரத்து பணியின் இடையே பொதுமக்களுக்ககு கொரானா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த (sanitizer) சனிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கிருமிநாசினி முழு அளவில் தெளிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை மக்கள் அதிக அளவில் காய்கறி வாங்குவதற்காக கூடிவிட்டனர். பின்னர் காவல் துறையினர் மூலம் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடைக்காரர்கள் மட்டுமே வந்து காய்கறி வாங்கி செல்ல வேண்டும். மக்கள் வரக்கூடாது. அதே போல் இன்று காலை திறக்கப்பட்ட டீக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து காவல் துறை மூலம் 7 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள், பால் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். ஆனால் மக்கள் அதிக அளவில் கூட கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். அதனால் மக்கள் பதற்றமின்றி அதை வாங்கி வைக்க வேண்டுமென்று தீவிரம் காட்டக்கூடாது. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியில் வரக்கூடாது. அவர்களுக்கு நோய்த்தொற்று எளிதில் ஏற்படும். இந்த நோயை கண்டு அச்சப்பட வேண்டிய தேவையில்லை. வீட்டிற்குள் இருந்தால் இந்த நோய் வராது. திருச்சி அரசு மருத்துவமனையில் 11 பேர் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேருக்கு ரத்த பரிசோதனை முடிவு வந்துவிட்டது. அதில் கரோனா இல்லை. மீதமுள்ள ஐந்து பேரும் சாதாரண சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கரோனாவுக்கான ரத்த பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுகிறது.
அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடுகள் சென்று வந்தவர்களிடம் பொதுமக்கள் யாரேனும் நெருங்கி பழகியிருந்தால் உடனடியாக 1077 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அவர்கள் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்குவார்கள். மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்புவதுக்கு வாகன வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மூன்று பிரத்தியேக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடுகள் சென்று வந்தவர்களிடம் பொதுமக்கள் யாரேனும் நெருங்கி பழகியிருந்தால் உடனடியாக 1077 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அவர்கள் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்குவார்கள். மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்புவதுக்கு வாகன வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மூன்று பிரத்தியேக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு 24.3.20 செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
வெளிநாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் மூலம் திருச்சி வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 483 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது ரத்த பரிசோதனையின் போது கரோனா தாக்குதல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பி விட்டனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை அடையாள படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களிடம் நெருங்கிப் பழகிய குடும்பத்தினரும் வெளியில் வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த பலர் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு கார் மூலம் சென்றுள்ளனர். அவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி உதவி திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடையில் நிதியுதவி அளிக்கப்படும். ரேஷன் கடைக்கு வரும்போது ஒரு மீட்டர் இடைவெளி பின்பற்றவேண்டும். ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1.32 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இசிஎஸ் மூலம் நிதி உதவி வரவு வைக்கப்படும். டீக்கடை, மளிகை கடை, காய்கறி கடை, பால் கடை போன்ற அத்தியாவசியத் கடைகள் திறந்து இருக்கலாம். ஆனால் கூட்டம் கூட கூடாது. இதேபோல் ஹோட்டல்களும் திறந்திருக்கலாம். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். கூட்டம் இல்லாமல் அதுவும் பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியூரில் இருந்து வந்த பயணிகள் 198 சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வந்து செல்ல தடை இல்லை. மாட்டுத்தீவனம், உரம் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் கிடையாது. வீட்டில் பயன்படுத்தும் வழக்கமான சோப்பை பயன்படுத்தி கை கழுவலாம். மாஸ்க் மற்றும் சானிட்டரி திரவம் அவசியமில்லை. கரொனா தொடர்பான எவ்வித சந்தேகத்துக்கும் 1077 என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு வருவோர் ஷேர் ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் வரலாம்.
தமிழகம் முழுவதும் வெளிநாடுகளிலிருந்து வந்த 54 ஆயிரம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 30, மணப்பாறை அரசு மருத்துவமனை 30 படுக்கைகள் உள்ளது. இது தவிர இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 வீதம் 60 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது.
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது தவறில்லை. ஆனால் கூட்டமாக கூடி அன்னதானம் வழங்க கூடாது. திருமண மண்டபங்கள் போன்ற இடங்களிலும் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் மூலம் திருச்சி வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 483 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது ரத்த பரிசோதனையின் போது கரோனா தாக்குதல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பி விட்டனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை அடையாள படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களிடம் நெருங்கிப் பழகிய குடும்பத்தினரும் வெளியில் வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த பலர் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு கார் மூலம் சென்றுள்ளனர். அவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி உதவி திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடையில் நிதியுதவி அளிக்கப்படும். ரேஷன் கடைக்கு வரும்போது ஒரு மீட்டர் இடைவெளி பின்பற்றவேண்டும். ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1.32 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இசிஎஸ் மூலம் நிதி உதவி வரவு வைக்கப்படும். டீக்கடை, மளிகை கடை, காய்கறி கடை, பால் கடை போன்ற அத்தியாவசியத் கடைகள் திறந்து இருக்கலாம். ஆனால் கூட்டம் கூட கூடாது. இதேபோல் ஹோட்டல்களும் திறந்திருக்கலாம். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். கூட்டம் இல்லாமல் அதுவும் பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியூரில் இருந்து வந்த பயணிகள் 198 சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வந்து செல்ல தடை இல்லை. மாட்டுத்தீவனம், உரம் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் கிடையாது. வீட்டில் பயன்படுத்தும் வழக்கமான சோப்பை பயன்படுத்தி கை கழுவலாம். மாஸ்க் மற்றும் சானிட்டரி திரவம் அவசியமில்லை. கரொனா தொடர்பான எவ்வித சந்தேகத்துக்கும் 1077 என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு வருவோர் ஷேர் ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் வரலாம்.
தமிழகம் முழுவதும் வெளிநாடுகளிலிருந்து வந்த 54 ஆயிரம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 30, மணப்பாறை அரசு மருத்துவமனை 30 படுக்கைகள் உள்ளது. இது தவிர இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 வீதம் 60 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது.
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது தவறில்லை. ஆனால் கூட்டமாக கூடி அன்னதானம் வழங்க கூடாது. திருமண மண்டபங்கள் போன்ற இடங்களிலும் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி:
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற போலி மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்கள் காரணமாக இந்நிறுவனம் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக அழகர்சாமி என்கிற ராஜா, எஸ் ஆர் கே ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆகியோர் அறம் மக்கள் நல சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இச்சங்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை செய்து வருகின்றனர். எல்பின் நிறுவனம் மூலம் மோசடியாக சுருட்டப்பட்ட நிதியை இச்சங்கம் மூலம் செலவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வகையில் எல்பின் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் 400 மேற்பட்ட பேர் துபாய் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 400 மேற்பட்ட பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னை, கொச்சின், மும்பை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் வழியாக கடந்த 3 ஆம் தேதி துபாய் சென்றனர் பின்னர் 9, ஆம் தேதிகளில் துபாயிலிருந்து திரும்பினர். அங்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டு சமீபத்தில் நாடு திரும்பினர். இவர்கள் புறப்பட்டு சென்றது முதலே கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. துபாய் சென்று வந்த இந்த 400 மேற்பட்ட பேருக்கும் இதுவரை கொரோனா குறித்த பரிசோதனை நடைபெறவில்லை. வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் மூலமாக தான் இந்தியாவிற்குள், குறிப்பாக தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் திருச்சி விமான நிலையம், சென்னை விமான நிலையம், கோவை, மதுரை விமான நிலையங்கள் வழியாக வந்த பயணிகளின் விவரங்களை தமிழக அரசு சேகரித்து அவர்களை கண்காணித்து வருகிறது. ஆனால் இந்த எல்பின் நிறுவனம் மூலம் துபாய் சென்று திரும்பியவர்கள் இதர மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கி தற்போது தமிழகத்திற்குள் வந்துள்ளனர். இவர்கள் யாரும் இதுவரை கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்துகொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் இந்த அறம் மக்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்குவதாக அவர்கள் நடத்தும் அறம் டிவி.யில் செய்தி வெளியாகியுள்ளது. தெரு ஓரம் வசிக்கும் மக்களை தேடிச்சென்று உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
( முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் கையுறை அணியாமல் உணவு துபாய் சென்று வந்த எஸ்ஆர்கே ரமேஷ்குமார் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் அரசுக்கு ஒத்துழைக்காமல் உணவு பரிமாறுகின்றனர்)
( அழகர்சாமி என்கிற ராஜா எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மற்றும் 400 நபர்கள் இவர்கள் தொடர்பில் உள்ள நபர்களை வரிசைப்படுத்தி இதனால் வரை யார் யாரிடம் தொடர்பு உள்ளவர்கள் என்று அறிந்து பரிசோதித்து தொற்று பரவாமல் மத்திய அரசு மாநில அரசு இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்)
இந்த செய்தியை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களுக்கும் ட்விட்டர் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது
இவர்களினால் இவர்கள் தொடர்பில் உள்ள மற்றும் அவர்கள் தொடர்பில் உள்ள எத்தனை பத்திரிக்கையாளர்கள் ஊடகவியல் நண்பர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...










