Wednesday, March 25, 2020

On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திருச்சி காந்தி சந்தையில் அதிக அளவில் கூட்டம் கூடுவதாக புகார் எழுந்ததையடுத்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


 நாளை 26 ஆம் தேதி முதல் காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே இயங்கும். இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மட்டுமே இந்த வியாபாரம் நடைபெறும். சில்லரை வியாபாரிகளான மளிகைக் கடைகாரர்கள் மட்டுமே வந்து காய்கறிகளை வாங்க வேண்டும். பொதுமக்கள் யாரும் காந்தி சந்தையினுள் செல்லக்கூடாது.




மளிகை  கடைகளில் மட்டுமே பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை காந்தி சந்தை இயங்காது. யாரும் உள்ளே செல்ல முடியாது. வியாபாரிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் காந்தி சந்தைக்கு வரவேண்டும். மாஸ்க் அணியாத வியாபாரிகள் சந்தைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதைப்போல் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.   ஏற்கனவே 13 பேர் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று மட்டும் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஏழு நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவில் கரோனா தாக்குதல் இல்லை என்று முடிவு வந்துவிட்டது. மீதமுள்ள 6 நோயாளிகளுக்கு பரிசோதனை வரவேண்டியுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது இருசக்கர வாகனங்கள் மட்டும் அதிக அளவில் போக்குவரத்து இருந்தது காவல் துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இவர்களைத் தவிர இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சென்றால் இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றார்.

0 comments: