Thursday, March 26, 2020

On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26
 அதிகமாக
உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையாக  ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த வகையில் திருச்சியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கூடிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நிர்வாகத்தால் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இந்த கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வகையில் இன்று திருச்சியில் முக்கிய சந்தையாக விளங்கும் காந்தி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 7 மணி வரை மட்டுமே காந்தி சந்தை இயங்கும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். மொத்த வியாபாரம் மட்டுமே இங்கு நடைபெறும். பொது மக்கள் யாரும் காய்கறி வாங்க வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய சந்தை இன்று காலை ஏழு மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் கூடிய பொதுமக்களை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

0 comments: