Saturday, May 23, 2020

On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.


தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் காரணமாகவும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். 


 மாநிலம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். 



திருச்சி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக கபிலன் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார். திருச்சி நுண்ணறிவு பிரிவு பதவி காலியாக இருந்தது.

இதில் முக்கியமாக க்யூ பிரிவின் திருச்சி டிஎஸ்பியாக இருந்த ஜி.மணிகண்டன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையராகவும், 



ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் கே.ராமச்சந்திரன் திருச்சி மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும், மதுரை காவலா் பயிற்சி மைய டிஎஸ்பி ஏ.முகம்மது நாசா் சென்னை காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 10 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
*திருச்சி    தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர் சங்கம் சார்பில் பணி நேரத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்* 


 தமிழகத்தின் 144 தடை உத்தரவு காரணமாக மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் கூட்ட நெரிசலால் சொல்ல முடியாது பல நெருக்கடிகளைச் சந்தித்தனர்.

   

 தமிழகத்திலுள்ள அனைத்து கடைகளிலும் மார்ச் 24 தேதி மாலை 4 மணிக்கு விற்பனை புள்ளி எடுத்துவிட்டனர் நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை விற்பனையான பாட்டில் காண விற்பனைத் தொகை கடையிலேயே இருப்பு இருந்தது கடை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் திருமண மண்டபம் மாவட்ட மேலாளர் குடோன் அலுவலகத்துக்கு சரக்கு பாட்டில்களை மாற்றும் பொழுது ஆடிட்டர் மூலமாக கணக்கு பார்க்கப்பட்டது அப்பொழுது இரண்டு மணி நேரத்திற்கான சரக்கு விற்பனையான தொகைக்கு 2% வட்டி ஜிஎஸ்டி 18% கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

 *தற்பொழுது டாஸ்மார்க் நிர்வாகம் ஏற்கனவே ஏற்பட்ட வித்தியாசத்துக்கு 50% அபராதத் தொகை 24% வட்டி தொகை ஜிஎஸ்டி 18% கட்ட வேண்டும் என்று டாஸ்மார்க் நிர்வாகம் மே 25ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும், என்று ஆணை பிறப்பித்துள்ளது.* 

மிகப்பெரிய முறைகேடுகள் செய்தவர்களை மாவட்ட மேலாளர் தப்பிக்க விட்டுவிட்டு நேர்மையான பணியாளர்களை வஞ்சிப்பது கைவிட வேண்டும் வங்கி மூலம் விற்பனை தொகையை தமிழகம் முழுவதும் வசூல் செய்யப்படவேண்டும்.

 மேலும் திருட்டுப்போன மதுபானத்திற்கு ஆன தொகையை பணியாளர்களை கட்ட சொல்லாமல் காப்பீடு மூலமாக பெற வழிவகை செய்ய வேண்டும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்.

 இதைக் கருத்தில் கொண்டு 23.5.2020 சனிக்கிழமை இன்று அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மற்றும் கருப்பு சட்டை அணிந்து டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு கடையில் பணிபுரிந்து கண்டனத்தை தெரிவித்தார்கள்

பேட்டி...... மாநிலச் செயலாளர் முருகானந்தம்
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது

   திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி பகுதியான வேம்பனூர் ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று இரவு மருங்காபுரி பகுதிகளில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.

 அப்போது மினிக்கியூர் அருகே மணல் அள்ளிக்கொண்டு வந்த ஒரு ஜேசிபி மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். ஜேசிபி ஓட்டுனர் திருப்பதி (33), லாரி ஓட்டுனர் குமரேசன் (32) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் தொடர்புடைய மினிக்கியூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அருணாச்சலம் என்ற பெருமாள் (55) மற்றும்  (33), தனபால் (45), சதீஷ் (25), சங்கர் (38), சதாசிவம் (30), ராசு (30) ஆகிய 9 பேரையும் கைது செய்து வளநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனை அடுத்து அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்த வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அனைவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை செய்து பின்னர் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
   
 கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற பெருமாள் மருங்காபுரி ஒன்றியத்தின் அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவில் இணைந்து தற்போது இவரது மனைவி பராசக்தி மருங்காபுரி ஒன்றிய 2 வது வார்டு அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து பினாமிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த இவரை தற்போது முதன் முறையாக போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   நீண்ட நாட்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளது மணப்பாறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 23

திருச்சியில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது திருவுருவச்சிலைக்கு
மாவட்ட ஆட்சியர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று காலை 8.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வருவாய் துறை கோட்டாச்சியர் விஸ்வநாதன் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொது மக்களின் நலன் கருதியும கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே
144தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் மற்றும் எந்த கட்சியினரும் அமைப்பும் 
கலந்து கொள்ள வேண்டாம் எனவும்,
மேலும், திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திகிறார்..
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் Covid-19 சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்*


கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசு  கடந்த மார்ச் முதல் தற்போது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் சாமானியர்கள் நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்.

இன்று திருச்சி மாவட்ட மத்திய வங்கியின் Covid-19 சிறப்பு கடனாக  நகைக்கடன் மிகக் குறைந்த வட்டியில் 58 பைசாவில் சுய உதவி குழுக்களின் மூலம் சிறப்பு கடன் வழங்கப்படுகிறது.

நகை கடன் திட்டத்தின் கீழ் கிராமிற்கு 3,000 ரூபாய் வீதம் 7% குறைந்த வட்டி வீதத்தில் 6 மாத காலத்திற்கு நபர் ஒருவருக்கு  ஒரு 5,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 2660 குழுக்களும் சங்க அளவில் 1190 குழுக்களும் உள்ளது.

இதில் Covid-19 சிறப்பு கடன் உதவிக்கு தகுதியுள்ள 75 குழுக்களுக்கு ரூ62.50 லட்சம் கடன்  வழங்கப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Friday, May 22, 2020

On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெருநாயை மீட்ட தீயணைப்புதுறை.
மீட்கச் சென்ற அதிகாரியிடம் பரிவுகாட்டி அமைதியாக நின்ற நாய்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 40 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் இன்று காலை அந்த வழியாக சுற்றித் திரியும் தெருநாய் ஒன்று கிணற்றில் இருந்த சுமார் 2 அடி நீரில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிவதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். ஆனால் நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் தயங்கி தயங்கி தீயணைப்பு துறை அதிகாரி கிணற்றில் இறங்கவே அவரைக் கண்டதும் நாய் அமைதியாக நின்று தன்னை மீட்க உதவிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்வகுபோல் மிகவும் பரிவு காட்டியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நாயின் மீது கயிற்றை கட்டி கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் கயிற்கை அவிழ்த்து விடும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்த பின்னர் கயிறு அவிழ்த்து விடப்பட்டதும் அங்கிருந்து மெதுவாக புறப்பட்டுச் சென்றது.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
சுதந்திரத்திற்கு பின் 
நம்நாட்டிலேயே அகதிகள் போல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்வதற்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.
ஜோதிமணி எம்.பி.பேட்டி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கிருமி நாசினி இயந்திரம் மற்றும் முழுகவச உடை உள்ளிட்டவைகளை கரூர் எம்.பி.ஜோதிமணி வழங்கினார்.
பின்னர் சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
இந்த நேரத்திலும் கூட டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது என்பது மிகுந்த வேதனை என்ற நிலையிலும் மேலும் 2 மணி நேரத்தை கூட்டியிருப்பது அதை விட வேதனை.
நம் நாட்டில் சுதந்திரத்திற்கு பின் சொந்த நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அகதிகளைப் போல் காலில் ரத்தம் வடிய நடந்து செல்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அப்படி ஏதும் கொடுக்கப்படவில்லை. அப்படியானால் ஒரு லட்சம் கோடியை மக்களின் வங்கிக் கணக்கில் 7500 வீதம் செலுத்தி இருக்கலாம் என்று கூறினார்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 22

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். 


ஊரடங்கு உத்தரவு ஆரம்பத்திலிருந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 45 நாட்களுக்கு மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இன்று திருச்சி காஜப்பேட்டை தண்ணீர் தொட்டி 
வளாகத்தில்
 பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவகர், வெல்லமண்டி சண்முகம், சந்திரு, கணேஷ் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 68 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 நபர்கள்
பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகைபுரிந்த 282 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டதில் 278 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 
நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க  வேண்டும்விழித்திரு - 
விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க  வேண்டும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை 
கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொது மக்கள் அனைவரும் முழு 
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்